
தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் அவர், “ஒரு அரசாங்க நிகழ்ச்சிக்கு மரியாதை கொடுத்து பொதுமக்களின் நிகழ்ச்சி என்று நாங்கள் செல்லும் பொழுது அவர் இன்று பொள்ளாச்சியில் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி இருக்கிறார். அரசாங்கத்தின் விழாவில் பாரத பிரதமரை பற்றி குறை கூறியது பாரதிய ஜனதா […]
Continue reading …
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோடை காலம் தொடங்க உள்ளதையடுத்து தமிழக கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் கொடுக்கும் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு “நாளை முதல் தமிழ்நாட்டிலுள்ள 48 முதல் நிலை கோவில்களில் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படும். இந்த நீர்மோர் வழங்கும் திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நாளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கவுள்ளார். கோவிலில் உள்ள கருங்கல் பதிக்கப்பட்ட தரை உள்ள இடங்களில் தரை […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருக்கும் எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக அண்ணாமலை ஆகியோர் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை இணைத்து சில கருத்துக்களை பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. போதைப்பொருள் கடத்தல் […]
Continue reading …
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். கடந்தாண்டு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று அறிவித்தது. இக்குழுவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார். மக்களவை, மாநிலப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய கட்டமைப்பை கருத்தில் கொண்டு, […]
Continue reading …
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மற்றும் மதிமுகவிற்கான தொகுதிகள், திமுக வேட்பாளர்கள் பட்டியல் போன்றவற்றை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன. திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி […]
Continue reading …
மத்திய அரசு ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்த ஓடிடி தளங்கள், இணையதளங்கள், செயலிகள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு (Ministry of Information & Broadcasting) அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பின்னும் ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கத்தை வெளியிட்டு வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள பக்கங்கள் (Social Media) மற்றும் ஓடிடி தளங்கள் […]
Continue reading …
டில்லி உயர்நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி உயர் […]
Continue reading …
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. கோடைக்காலம் நெருங்குகின்ற இந்த வேளையில், தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீரை பெற திராணி அற்ற இந்த விடியா […]
Continue reading …
குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பொய்யான செய்திகளை பரப்பும் குணம் திமுகவின் டிஎன்ஏவில் உள்ளது என காட்டமாக பதிவு செய்துள்ளார். சமீபத்தில் குஷ்பு அளித்த பேட்டியில், “1000 ரூபாய் பிச்சை போட்டால் மகளிர்கள் ஓட்டு போட்டு விடுவார்களா?” என திமுகவை கேள்வி எழுப்பினார். இதனால் குஷ்பு மீது கடும் கண்டனங்கள் எழுந்தது. மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறுவதா என திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரது உருவப்படத்தை எரித்து வருகின்றனர். இது குறித்து விளக்கமளித்துள்ள […]
Continue reading …
மார்ச் 18ம் தேதி வரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு […]
Continue reading …