
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபதாரமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த டிசம்பர் 21ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது. இதுதீர்ப்பினை அடுத்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற […]
Continue reading …
பாஜக கூட்டணியை இவ்வாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வீழ்த்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதும் 375 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியில் மொத்தம் 25 அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் மட்டுமே 375 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதமுள்ள 175 தொகுதிகள் மட்டுமே மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் என்பதால் இந்தியா […]
Continue reading …
பிரதமர் மோடி இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு வருவதில் பெருமிதம் கொள்வதாக பேசினார். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். இதுகுறித்து அவர் பேசும்போது, “இவ்வாண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் முதல் அரசு நிகழ்ச்சியாகவும் தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது, பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை.களை தொடங்கினர். […]
Continue reading …
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 2.5 மடங்கு கூடுதல் நிதி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முந்தைய காலங்களை விட தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிகமாக நிதி கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்” […]
Continue reading …
தமிழக அரசு தமிழகத்திலுள்ள 6,218 அரசுப் பள்ளிகளில் செயல்படும் தமிழ் மன்றங்களுக்கு கலைஞர் பெயர் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பில், “ஓங்கலிடைப் பிறந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழின் ஆற்றலையும், ஆகச் சிறந்த இளமைத் திறத்தையும் பச்சிளம் பயிர்களாகிய பள்ளிப் பிள்ளைகள் அறியவும்; நினையவும், தமிழார்வமும், தமிழுணர்வுமுடையோர் தங்கள் தமிழாற்றலை வெளிப்படுத்தவும் வாய்ப்பாகத் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் பேருள்ளப் பெருந்தகைமையால் தமிழ்நாட்டு அரசு உயர்நிலைப் […]
Continue reading …
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவருக்கு சக திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தலைவராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ள விஜயகாந்தின் மறைவையொட்டி நாளை ஒருநாள் […]
Continue reading …
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். அவ்வப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதங்களில் அவர் உடல்நிலை சீராக இல்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு […]
Continue reading …
இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் “நேரம்,” “பிரேமம்“ மற்றும் “கோல்ட்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.இவர் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆனால் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தனக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக இயக்குனர் அல்போன்ஸ் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை எனவும் கூறினார். இப்போது அவர் அஜீத்குமார் சம்மந்தமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். […]
Continue reading …
நேற்றிரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பின்னடைவில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். இத்தகவல் […]
Continue reading …
தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்பு சில நாட்களில் மீண்டும் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். கலந்து கொண்டாலும், அவர் அந்நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. மேலும் சுயநினைவின்றியே அவர் இருப்பது போலவே அந்த நிகழ்ச்சி முழுவதும் பிறர் உதவியோடு அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் தேமுதிகவினர் அரசியல் லாபத்துக்காக விஜயகாந்தை வதைப்பதாகக் குற்றம் சாட்டினர். […]
Continue reading …