
கடந்த சில ஆண்டுகளாக ஆளும் மத்திய அரசை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிப்பின் போது கூட ஜெய்பீம் படத்துக்கு விருது கிடைக்காததற்கு கடுமையான விமர்சனங்களை வைத்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வந்தாலும் நான் கேள்வி கேட்பேன். அவரை வரவேற்பதில் எனக்கு […]
Continue reading …
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நாடகம் என்று பாஜக கட்சியை கடும் விமர்சனம் செய்துள்ளது. வீட்டு சிலிண்டர் ரூபாய் 200 குறைக்கப்படும் என நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் இன்று முதல் சென்னையில் சிலிண்டர் விலை ரூபாய் 918.50 என விற்பனையாகி வருகிறது. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் […]
Continue reading …
கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் கார்களுக்கு மாற்றாக 100% எத்தனாலில் இயங்கும் கார் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இன்று முதல் மத்திய அமைச்சர் இந்த காரை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பெட்ரோல் டீசல் இல்லாமல் 100% எத்தனாலில் இயங்கும் டொயோட்டா இன்னோவா காரை அறிமுகப்படுத்தவுள்ளார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அதிக புகையை […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்கள் நிறைவேறிய பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி எந்த வழக்கும் நீடிக்காது என்றும் இதன் மூலம் 70% வழக்குகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் குஜராத், மராட்டியம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன்-டையு, தாத்ரா-நகர் ஹவேலி ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியபோது, […]
Continue reading …
வெற்றிகரமாக இந்தியாவின் சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியுள்ளது. அடுத்த கட்டமாக நிலவில் மனிதர்களை குடியேற்றும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. சந்திராயன் 3 வெற்றி குறித்து பல அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். -திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் நெகட்டிவ் ஆக சில கருத்துக்களை தெரிவித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா இது குறித்து கூறும் போது “நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி […]
Continue reading …
திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசுக்கு முழிப்பு வருமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இவ்விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுதும் சிதிலமடைந்து இருக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப் போவதாக அறிவித்த திமுக, அதன் பிறகு அது […]
Continue reading …
பாஜகவின் கேபி ராமலிங்கம் தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் என பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மற்றும் அதிமுகவின் தலைவர்கள் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என கூறி வருகின்றனர். சேலம் அருகே ஓமலூரில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆனதையடுத்து தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “திமுக எனும் பேரியக்கம் உண்மையான ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிக்கின்ற இயக்கம். மக்கள் நலனுக்கு ஆதரவானவர்கள் யார், மக்களின் எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டு செயல்படுகின்ற இயக்கம். அந்த வகையில்தான் 2019-ம் ஆண்டு அமைந்த கொள்கைக் கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் உறுதியாகத் தொடர்வதுடன், ஒவ்வொரு தேர்தல் களத்திலும் வெற்றியும் தொடர்ந்து வருகிறது. அதுபோல, திமுகவினரும் […]
Continue reading …
நீதிமன்றம்அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் உட்பட அவரது அணியினர் அதிமுக கொடி மற்றும் கரையை பயன்படுத்தக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கூறி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக கொடி மற்றும் கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று […]
Continue reading …
சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட காவல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்பி எம்எல்ஏக்களக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காணொளி மூலம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்ட் 28ம் தேதி […]
Continue reading …