Home » Archives by category » அரசியல் (Page 94)

அதிமுக மாநாட்டில் ரூ.100, ரூ.500 விநியோகமா?

Comments Off on அதிமுக மாநாட்டில் ரூ.100, ரூ.500 விநியோகமா?

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில், 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார். பெருமளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இம்மாநாட்டிற்கு 3 லட்சம் அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்ததாக தகவல் வெளியாகிறது. மாநாட்டிற்கு முன்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி ரசிகர்களை மதுரை மாநாட்டிற்கு வரவழைக்க, “ஜெயிலர்” திரைப்பட டிக்கெட்டிகள் இலவசமாக வழங்கியிருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. மதுரை அதிமுக […]

Continue reading …

அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி

Comments Off on அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் கல்லூரி வளாகத்தில் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னை, வேளச்சேரியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டனி, எக்கனாமிக்ஸ் படிக்கும் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில், “சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- […]

Continue reading …

லடாக் பகுதியில் ராகுல் காந்தி பைக் சவாரி!

Comments Off on லடாக் பகுதியில் ராகுல் காந்தி பைக் சவாரி!

இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். அங்கு அவர் பைக்கில் பயணம் செய்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். லே என்ற பகுதியிலிருந்து பேங்காங் என்ற ஏரி பகுதிக்கு பைக்கில் சவாரி மேற்கொண்டார். பேங்காங் ஏரியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. […]

Continue reading …

விரலை வெட்டி அமைச்சருக்கு பரிசாக அனுப்பிய நபர்!

Comments Off on விரலை வெட்டி அமைச்சருக்கு பரிசாக அனுப்பிய நபர்!

மாநில உள்துறை அமைச்சருக்கு மஹாராஷ்டிரம் மாநிலம் மும்பையைச் சேர்ந்த தனஞ்செய் என்பவர் தன் ஒரு விரலை வெட்டி அனுப்பியுள்ளார். முதலமைச்சர் ஏக்நத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி மஹாராஷ்டிரம் மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள மும்பை உல்ஹாஸ் நகரில் நந்தகுமார் தன் குடும்பத்துடன் முகாம் எண் 4. உள்ள அஷாலேபாடா பகுதியில் வசித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் தன் மனைவியுடன் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். நந்தகுமார் […]

Continue reading …

மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

Comments Off on மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

வரும் 20ம் தேதி திமுக இளைஞரணி தரப்பிலிருந்து தமிழகம் முழுதும் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. மதுரையில் மட்டும் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக சமீபத்தில் மாணவன் மற்றும் அவருடைய தந்தை இறந்ததையடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப் போவதாக திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி அறிவித்தது. அதே 20ம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதால் அதிமுக இதற்கு கண்டனம் தெரிவித்தது. பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால் ஜனநாயகத்தை கருத்தில் […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்து சமீபத்தில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் போக்குவரத்து துறையில் பணி அமத்துவதற்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கூட்டுச்சதி நடந்துள்ளது என்றும் நாமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. விசாரணையின் […]

Continue reading …

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?

Comments Off on தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?

கே.எஸ். அழகிரியே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு தனித்தனியே கோஷ்டியும் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியை டில்லி தலைமை நியமித்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்று ஐந்து ஆண்டுள் ஆகியுள்ளது. அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், புதிய காங்கிரஸ் […]

Continue reading …

மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா பாஜக?

Comments Off on மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா பாஜக?

நேற்று மாலையில் ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள தேவிபட்டனம் கிழக்கு கடற்கரை சாலையில் முகவர்கள் பயிற்சிக் கூட்டத்திற்கு 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திமுக முகவர்கள் கலந்துகொண்டனர். இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நல மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “9 ஆண்டுகால பாஜக அரசு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதா? மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மீனவர்கள் […]

Continue reading …

அதிமுகவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போஸ்டர்கள்

Comments Off on அதிமுகவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போஸ்டர்கள்

மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஒரே இடத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், உட்கட்சி குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் இணைந்து சசிகலா மற்றும் டிடிவி. தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சமீபத்தில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி […]

Continue reading …

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர்!

Comments Off on மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர்!

திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்கா என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான டெண்டர் செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதால் இன்னும் மூன்று வருடங்களில் மதுரை எய்ம்ஸ் […]

Continue reading …