Home » Archives by category » இந்தியா (Page 101)

கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்!

Comments Off on கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்!

கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இன்றும் மனிதர்கள் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதை விடவில்லை என்று சில சம்பவங்கள் மூலம் தெரிகிறது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் என்ற மாவட்டத்தில் உள்ள லம்பா ஜாதன் என்ற கிராமத்தில் ஒரு கோயிலில் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் மீது அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்து, வீடியோ […]

Continue reading …

வந்தே பாரத் ரயில் சேதம்!

Comments Off on வந்தே பாரத் ரயில் சேதம்!

வந்தே பாரத் ரயில் என்ஜினின் முன் பகுதி எருமைகள் மோதியதால் சேதமடைந்துள்ளது. சமீபத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில்கள் ரயில்வே துறைக்கு அளிக்கப்பட்டு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று மும்பை செண்ட்ரலில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 11.15 மணியளவில் இந்த ரயில் வத்வா ரயில் நிலையத்திற்கும், மனிநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எருமைகள் தண்டவாளத்தில் […]

Continue reading …

உத்தரகாண்டில் பஸ் கவிழ்ந்து 32 பேர் பலி!

Comments Off on உத்தரகாண்டில் பஸ் கவிழ்ந்து 32 பேர் பலி!

பேருந்து ஒன்றில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது உத்தரகாண்ட் பகுதியில் திடீரென கவிழ்ந்ததில் 32 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியிலுள்ள பவுரி மாவட்டத்தில் பிரோன்கால் பகுதியில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர். பேருந்து சிம்ரி பகுதியில் மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்தபோது வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்து விழுந்தது. பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் […]

Continue reading …

எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Comments Off on எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இன்று இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பிரதமர் மோடி நாட்டுக்காக அர்ப்பணித்தார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் என்ற பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 4 ஆண்டுகளில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1470 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சுமார் 247 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், […]

Continue reading …

ரயில்கள் இனி மின்னல் வேகம்!

Comments Off on ரயில்கள் இனி மின்னல் வேகம்!
ரயில்கள் இனி மின்னல் வேகம்!

இந்திய ரயில்வே இனி ரயில்கள் மின்னல் வேகம் செய்யும் என்று அறிவித்துள்ளது. இனி அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் சுமார் 2 கோடியே பயணிகள் பயணம் செய்கின்றனர். இவ்வாண்டிற்கான ரயில் பாதை அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 130 ரயில் சேவைகள் சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து ரயில்களின் வேகமும் […]

Continue reading …

ஜியோவின் அடுத்த அறிவிப்பு!

Comments Off on ஜியோவின் அடுத்த அறிவிப்பு!

ஜியோ இந்தியாவின் தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளது. ஆனால் தற்போது பட்ஜெட் விலையில் லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் 4ஜி சேவையோடு நுழைந்த ஜியோ நிறுவனம் அந்த சமயம் பிரத்யேக 4ஜி ஸ்மார்ட்போன்களை அன்லிமிடட் டேட்டா வசதியுடன் வழங்கியது. தற்போது இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் வரும் தீபாவளிக்கே 5ஜி சேவையை தொடங்க உள்ள ஜியோ அதற்கான விலை பட்டியல் குறித்தும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் […]

Continue reading …

80 தொகுதிகளிலும் பாஜக இலக்கு!

Comments Off on 80 தொகுதிகளிலும் பாஜக இலக்கு!

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகளிலும், பாஜக வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒட்டுமொத்த 80 தொகுதிகளிலும் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்து உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் பூபிந்தர் சிங் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அணிவகுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் […]

Continue reading …

காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?

Comments Off on காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?
காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?

பெங்களூருவில் ஏற்பட்ட கனமழையால் பலரது இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைந்தது. அதில் ஒருவரது காரின் விலை ரூ.11 லட்சம், ஆனால் காரை ரிப்பேர் செய்வதற்கு ரூ.22 லட்சம் ஆகும் என கார் நிறுவனம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் என்பவர் தனது தனது காரை ரிப்பேர் செய்ய கார் நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். கார் ரிப்பேர் செய்ய எவ்வளவு கட்டணம் என்று கேட்டதற்கு கார் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் செலவாகும் என்று […]

Continue reading …

மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன்!

Comments Off on மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன்!

மனைவியை தோளில் சுமந்து கொண்டு திருப்பதி மலையில் ஏறிச் சென்ற கணவனது செயல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கனியபுலங்கா பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததையடுத்து, வேண்டுதலை நிறைவேற்ற, இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றனர். அப்போது, வேகமாகப் படியில் ஏறிய தன் கணவன் சத்திய நாராயணனிடம் தன்னை தூக்கிக் கொண்டு படியில் ஏறும்படி சவால் விடுத்தார். மனைவி லாவண்யாவின் சவாலை ஏற்று அவரை […]

Continue reading …

குடிபோதையில் ஆசிரியர்; சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

Comments Off on குடிபோதையில் ஆசிரியர்; சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

உத்தரபிரதேசத்தில் பள்ளியில் மது அருந்திக் கொண்டே பாடம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சைலேந்திர சிங் கவுதம் என்பவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே பீர் பாட்டிலை குடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியர் மீது உத்தரபிரதேச காவல்துறை நடவடிக்கை […]

Continue reading …