
காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் நேரு குடும்பத்தை சேராத ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. நாடு முழுதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 10 மணி முதல் வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது. மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, […]
Continue reading …
மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இனி உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது அவசர காலத்திற்கு மீட்பு படையினர் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி செய்யப்படும். அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஹெலிபேட் வசதி செய்யப்படும். இதன் மூலமாக பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சுறுசுறுப்பாக செய்யப்படும். ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான வசதி செய்யப்பட்டால் […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கேரள மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு அதாவது அக்டோபர் 21ம் தேதி வரை கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. ஐஎம்டி எச்சரிக்கையின் படி, அக்டோபர் 20ம் தேதி வரை கேரள மாநிலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், […]
Continue reading …
செவிலியர்கள் 2 இளைஞர்கள் மருத்துவமனையைப் புகைப்படம் எடுத்த காரணத்தினால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக இது அறியப்படும் நிலையில் இங்குள்ள சுகாதாரம், மருத்துவவசதிகள் உள்ளிட்டவை பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. பீகார் மாநிலத்தில் உள்ள சப்ரா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு மருத்துவமனையில் […]
Continue reading …
சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள கங்கேர் மாவட்ட எல்லையில் ரிசர்வ் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் பலியாகி உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் நக்சல்கள் தப்பியோடி உள்ளனர். சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கேர் மாவட்ட எல்லையில் பிரபலமான தேவ்கான், ஹுச்சாடி ஆகிய காட்டுப் பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளதாக போலீசுக்கு தகவல் வந்ததையடுத்து, நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்த நக்சல் தடுப்பு படை போலீசார் அங்கு சென்று அவர்களைத் தேடினர். அப்போது, நக்சல்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியில் சுடவே, இருதரப்பினரும் […]
Continue reading …
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தர்றோம்..! என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உட்பட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன. இந்த தீபாவளி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. […]
Continue reading …
இந்திய தேர்தல் ஆணையம் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது? என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டசபை வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அதற்கு முன்னரே தேர்தல் நடைபெற வேண்டும். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் அல்லது நவம்பர் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநில […]
Continue reading …
தீவிரவாதிகளுடன் போராடி குண்டடிப்பட்டு இறந்த ராணுவத்தின் ஸூம் நாய்க்கு ராணுவத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மோப்ப நாய் ஸூம். சமீபத்தில் ஒரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தீவிரவாதிகளை கண்டறிய ஸூம் அனுப்பப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதால் ஸூம் மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தது. பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் அந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான […]
Continue reading …
மத்திய அரசு இனி 4ஜி போன்கள் தயாரிப்பை நிறுத்தப்போவதாக வெளியிட்டுள்ள தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது. தற்போது இந்தியா முழுவம் 4ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது. நாடு முழுவதும் மக்கள் இதற்கான 4ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் 4ஜியை விட அதிகமான இணைய வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றை சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 5ஜி சேவைகளை தொடங்கி வைத்த நிலையில் தீபாவளி முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு […]
Continue reading …
சென்னை மற்றும் மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் முதல்முறையாக இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நவம்பர் 10ம் தேதி முதல் வந்தே பாரத் சென்னை மற்றும் மைசூருக்கிடையே இயக்கப் போவதாகவும் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவின் முதல் செமி புல்லட் ரயிலான இந்த வந்தே பாரத் ரயில் 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து மைசூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும்- மைசூர் இடையே 483 கிலோமீட்டர் […]
Continue reading …