Home » Archives by category » இந்தியா (Page 106)

மூக்கு வலி செலுத்தும் மருந்து அறிமுகம்!

Comments Off on மூக்கு வலி செலுத்தும் மருந்து அறிமுகம்!

இந்தியாவில் கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உட்பட தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி திட்டம் மூலமாக நாடு முழுவதும் 150 கோடி டோஸுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போல் அல்லாமல் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா […]

Continue reading …

நர்சிங் மாணவி தற்கொலை!

Comments Off on நர்சிங் மாணவி தற்கொலை!
நர்சிங் மாணவி தற்கொலை!

நர்சிங் மாணவி ஒருவர் தனக்கு தூக்கம் வராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் நர்சிங் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு தூக்கம் வராதது பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நர்சிங் மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவி எழுதிய […]

Continue reading …

பல நூறு கோடி மதிப்பில் பிடிபட்ட போதைப்பொருள்!

Comments Off on பல நூறு கோடி மதிப்பில் பிடிபட்ட போதைப்பொருள்!

தலைநகர் டில்லியில் ரூ.1200 கோடி மதிப்பு போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் 1200 கோடி மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருள் பிடிபட்டுள்ளது. இதையடுத்து இப்போதைப் பொருளை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரிடம் கைப்பற்றியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது ஆப்கான் நாட்டைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையில் லக்னோவில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 312 கிலோ போதைப்பொருள் சிக்கி உள்ளது. அதன் மதிப்பு 1,200 […]

Continue reading …

மாணவியின் கழுத்து அறுத்த தாய்மாமன்!

Comments Off on மாணவியின் கழுத்து அறுத்த தாய்மாமன்!

ஆந்திர மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவியை தாய்மாமன் கழுத்தை அறுத்து ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இக்காதலை அந்த மாணவி ஏற்றுக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த நாகராஜ் மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பித்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரை மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்தனர். தலைமறைவாக உள்ள நாகராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Continue reading …

டீசல் தட்டுப்பாடு இல்லை!

Comments Off on டீசல் தட்டுப்பாடு இல்லை!

இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது வாகன ஓட்டிகள் பெரும் நிம்மதியை அளித்தாலும், திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. சென்னையிலுள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் டீசல் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது […]

Continue reading …

சர்ச்சைக்கு உள்ளான கேரள நீதிமன்ற தீர்ப்பு!

Comments Off on சர்ச்சைக்கு உள்ளான கேரள நீதிமன்ற தீர்ப்பு!

கேரள நீதிமன்றம் ஆபாச உடை அணிந்த பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்தால் அது குற்றமாகாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இத்தீர்ப்புக்கு பெண்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. கேரள ஐகோர்ட் நீதிபதி வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியபோது ஆபாச உடை அணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தால் குற்றமாகாது என்று கூறியுள்ளார். இத்தீர்ப்புக்கு பெண்கள் மற்றும் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இத்தீர்ப்புக்கு கடும் விமர்சனங்களை பெண்களின் அமைப்பு செய்து வருகிறது. ஆண்களை […]

Continue reading …

27ம் தேதிமுதல் திருப்பதியில் பிரம்மோற்சவம்!

Comments Off on 27ம் தேதிமுதல் திருப்பதியில் பிரம்மோற்சவம்!
27ம் தேதிமுதல் திருப்பதியில் பிரம்மோற்சவம்!

இம்மாதம் 27ம் தேதி முதல் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 27 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த மெகா திருவிழா தொடக்கத்தை அடுத்த கொடியேற்று விழா நடைபெற உள்ளதாகவும் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி […]

Continue reading …

மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்!

Comments Off on மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி சிவமூர்த்தி முருகன் மீது இரண்டு மாணவிகள் பாலியல் புகாரளித்திருந்தனர். இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி அதற்கு அனுமதி […]

Continue reading …

அகிலேஷ் யாதவின் டுவிட்டர் பதிவு!

Comments Off on அகிலேஷ் யாதவின் டுவிட்டர் பதிவு!

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் சுங்கச்சாவடி தடுப்புகளை இடித்துச் சென்ற வாகனங்களின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது முறையாக பாஜக தொடர்ந்து பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். ஆக்ராவில் டிராக்டரில் மணல் நடத்தி வந்த கொள்ளையர்கள் அங்குள்ள சுங்கச்சாவடியில் இருந்த தடுப்புகளை தகர்த்துவிட்டு, […]

Continue reading …

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Comments Off on ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மூத்த குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தியாவிலுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நல்ல அறிவிப்புகளை வழங்கி வருகிறது. ஓய்வூதியம் பெறும் பென்சனர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை வருடா வருடம் கொடுத்துதான் பென்சன் தொகையை பெற வேண்டியிருக்கும். மிக எளிதாக அஞ்சலகத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ் நாள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இந்த […]

Continue reading …