
பிரபலமான சிவன் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு பறக்கவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திரதின விழா ஆகஸ்டு 15ம் தேதியன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதும் தேசியக் கொடி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. இந்நிலையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆந்திராவில் உள்ள பிரபலமான சிவன் கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தேசியக்கொடி […]
Continue reading …
நேற்று பெரும்பாலான ஊடகங்களில் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், “வணிக நோக்கிலான வாடகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி என்றும் குடியிருப்பு பகுதியை வர்த்தக நோக்கங்களுக்காக வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால் அதற்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். சொந்த பயன்பாட்டிற்காக பொதுமக்கள் வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடி இருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி […]
Continue reading …
சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்திய அரசின் கண்டனத்திற்கு உள்ளான சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வரவில்லை என்று அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளது. கடந்த 11ம் தேதியன்று சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வர இருப்பதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக 17ம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் சீன உளவு கப்பலின் இந்த வருகை இந்தியாவை உளவு […]
Continue reading …
தலைநகர் டில்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயமென அரசு உத்தரவிட்டள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 44,203,754 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 526,826 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 43,535,610 என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. டில்லி உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டி மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500அபராதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி […]
Continue reading …
மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் இன்று காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே நடத்த துப்பாக்கிசூட்டில் மரணமடைந்துள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹாலில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக இருவர் எல்லையை தாண்டி ஊடுறுவியுள்ளனர். அவர்களை நிற்க சொல்லி ராணுவத்தினர் தடுத்தபோது அவர்கள் துப்பாக்கியால் ராணுவத்தினரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதனால் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் […]
Continue reading …
பதவி விலகிய ஒரு மணி நேரத்தில் மீண்டும் முதல்வரானார் நிதிஸ்குமார். இதனால் பீகார் மாநிலத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் அரசியலில் பாஜக -மற்றும் ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளிடையே நீண்ட காலமாக மோதல் இருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் நிதிஸ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜன தா தளம், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நிதிஸ்குமாருக்கும் பாஜகவுக்குமிடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடுகள் […]
Continue reading …
மின்சார சட்டத் திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மக்களவையில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்தார். காங்கிரஸ், திமுக உட்பட அரசியல் கட்சிகள் அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று […]
Continue reading …
விவசாயி ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றியுள்ளார். குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் என்ற கிராமத்தில் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தையை இரக்கமின்றி மண்ணில் புதைத்துள்ளார். அப்போது தற்செயலாக வந்த விவசாயி ஹிதேந்திர சிங், அக்குழந்தையை மீட்டு, அருகிலுள்ள ஹியத் நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையைப் புதைத்த அப்பா அல்லது அம்மாவை போலீசார் தேடி வருகின்றனர். உள்ளூர் மக்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ள […]
Continue reading …
8ம் வகுப்பு மாணவர் அவரது 12 வயதில் 3 செயலியை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் மொபைல் வாங்கினார். அந்த மொபைல் மூலமே அவர் பல விஷயங்களை கற்றுக்கொண்டு செயலிகளை உருவாக்கினார். அவர் தற்போது மூன்று செயலிகளை உருவாக்கி உள்ளார். இதையடுத்து உலகின் மிக இளைய வயது ஆப் டெவலப்பர் என்ற பெருமை அவருக்கு […]
Continue reading …
ஆந்திர மாநிலத்தில் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காரில் வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் சட்டக்கல்லூரியில் கர்னூல் பகுதியைச் சேர்ந்த மாணவி(24) இறுதியாண்டு படித்து கொண்டிருக்கிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்த பின், பேருந்திற்காக தாமனேஸி பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது, காரில் வந்த 2 வாலிபர்கள் மாணவியை பலவந்தமாக காரில் கடத்திச் சென்றுள்ளனர். உடனே அருகில் இருந்த மக்கள் போலீசாருக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவித்தனர். […]
Continue reading …