Home » Archives by category » இந்தியா (Page 125)

நாட்டில் 31,542 பேருக்கு கொரோனா தொற்று

Comments Off on நாட்டில் 31,542 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, செப் 24: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 31,542 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 31,542 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,542 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், […]

Continue reading …

இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

Comments Off on இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சமூக நீதிக்கு எதிரான இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில், இந்த கட்-ஆப் மதிப்பெண்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உயர் […]

Continue reading …

இந்திய ராணுவத்தின் வெற்றி கலாச்சார திருவிழா – 26ஆம் தேதி கொல்கத்தாவில் துவக்கம் !

Comments Off on இந்திய ராணுவத்தின் வெற்றி கலாச்சார திருவிழா – 26ஆம் தேதி கொல்கத்தாவில் துவக்கம் !

டிசம்பர் 16, 2021, வங்கதேசத்தின் விடுதலை மற்றும் 1971-ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி ஆகியவற்றின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் தினமாகும். இந்திய வரலாற்றில் இந்த பிரசித்தி பெற்ற நிகழ்வைப் போற்றும் வகையில் பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. போரின்போது இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே நிலவிய கலாச்சார இணைப்பை எடுத்துரைப்பதற்காக வெற்றி கலாச்சார திருவிழாவை கொல்கத்தாவில் செப்டம்பர் 26-29 நடத்த இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம்  திட்டமிட்டுள்ளது. திரைப்படங்கள், நாடகங்கள், இசை […]

Continue reading …

ஜம்மு – காஷ்மீரில் சரணடைய மறுத்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

Comments Off on ஜம்மு – காஷ்மீரில் சரணடைய மறுத்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், செப் 23: ஜம்மு – காஷ்மீரில் நேற்று சரணடைய மறுத்த பயங்கரவாதியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள காஷ்வா கிராமத்தில், கிராம மக்கள் மீது பயங்கரவாதி அனாயத் அஷ்ரப் தார் என்பவர், தாக்குதல் நடத்தி வந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் சேர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்புப் படையினர் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவால் 31,923 பேர் பாதிப்பு

Comments Off on இந்தியாவில் கொரோனாவால் 31,923 பேர் பாதிப்பு

புதுடெல்லி, செப் 23: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 31,923 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 31,923 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,990 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், 282 பேர் […]

Continue reading …

இந்தியாவில் 26,964 பேர் கொரோனாவால் பாதிப்பு

Comments Off on இந்தியாவில் 26,964 பேர் கொரோனாவால் பாதிப்பு

புதுடெல்லி, செப் 22: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 26,964 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 26,964 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,167 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், 383 பேர் […]

Continue reading …

கோவளம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்!

Comments Off on கோவளம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்!

கடற்கரை மற்றும் கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றுமொரு அங்கீகாரமாக, தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறுசான்றினாலும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று […]

Continue reading …

கோவிட் தடுப்பூசி: 80 கோடியைத் கடந்து சாதனை !

Comments Off on கோவிட் தடுப்பூசி: 80 கோடியைத் கடந்து சாதனை !

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 80 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,42,732 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 79,15,457 முகாம்களில் 80,43,72,331 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 38,945 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,71,167 ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.68 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து […]

Continue reading …

நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

Comments Off on நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள், இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் ரூ.22.31 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது!

Comments Off on சென்னை விமான நிலையத்தில் ரூ.22.31 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது!

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் 17.09.2021 அன்று இரவு 9 மணிக்கு ஏர் அரேபியா  ஜி9-473 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து பயணம் செய்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது முழுக்கால்சட்டை பையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் ரூ. 16,30,590 மதிப்பில் 310 கிராம் எடையிலான தங்கத்தை தமது உடலில் அவர் மறைத்து எடுத்து வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர, அவர் கொண்டு வந்திருந்த பையில் ரூ. 6,00,200 மதிப்பிலான மின்னணு பொருட்களையும் முறைகேடாக மறைத்து […]

Continue reading …