Home » Archives by category » இந்தியா (Page 21)

பெங்களூருவில் பலத்த கனமழை!

Comments Off on பெங்களூருவில் பலத்த கனமழை!

நேற்றிரவு பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக தரையிறங்க முடியாத 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. நேற்றிரவு பெங்களூருவில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 10 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இன்று அதிகாலை பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும், 10 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. முன்னதாக பெங்களூரு நகரம் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் […]

Continue reading …

காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!

Comments Off on காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!

காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு மனைவி இருந்தால் இரண்டு லட்சம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அதில் மகாலட்சுமி திட்டம் என்று அறிவிப்பு பலரையும் கவர்ந்தது என்பதும் இந்த திட்டத்தின்படி ஏழை குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் அவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் […]

Continue reading …

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்!

Comments Off on கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்!

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றம் வரும் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்டு இடைக்கால ஜாமின் […]

Continue reading …

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஆளுநருக்கு கடிதம்!

Comments Off on நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஆளுநருக்கு கடிதம்!

பாஜக அரசு ஹரியானாவில் ஆளும் பெரும்பான்மை இழந்துள்ளது. அம்மாநில ஆளுநருக்கு, முன்னாள் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வழங்கி வந்த ஆதரவை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்று, காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். பாஜக அரசு பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று […]

Continue reading …

கோவிஷீல்டை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

Comments Off on கோவிஷீல்டை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கோடிக்கணக்கானோர் செலுத்தியவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு குறித்த வழக்கு நடந்தது. இவ்வழக்கின் போது கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் அரிதான பக்க விளைவு ஏற்படுத்தும் என்றும் ரத்தம் உறைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே 175 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது தாக்கல் செய்த […]

Continue reading …

சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு!

Comments Off on சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு!

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக புதிய சர்ச்சையை கிளப்பினார். அது பெரும் விவாதப் பொருளானது. இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என அவர் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியாவைப் போன்ற […]

Continue reading …

அபராதத்துடன் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி!

Comments Off on அபராதத்துடன் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி!

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களுடன் உரையாட அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமீபத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படும் மனு நீதிமன்றத்தில் விசாரணைகள் உள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே […]

Continue reading …

மாயாவதி உத்தரவால் பரபரப்பு!

Comments Off on மாயாவதி உத்தரவால் பரபரப்பு!

மாயாவதி உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னால் முதலமைச்சரும், பகுஜன் சமாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் கடந்த ஐந்து மாதத்திற்கு முன் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். ஆனால் திடீரென ஆகாஷ் ஆனந்த் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியதாக மாயாவதி உத்தரவிட்டுள்ளார். இச்செய்தி உத்தரப்பிரதேச மாநில ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து மாயாவதி அளித்துள்ள விளக்கத்தில், “ஆகாஷ் ஆனந்த் இன்னும் அரசியலில் முதிர்ச்சி அடையவில்லை. அதுவரை அவர் […]

Continue reading …

*ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.*

Comments Off on *ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.*

*ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.* ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு. பெங்களூரு – டெல்லி, கோழிக்கோடு – துபாய், குவைத் – தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து.

Continue reading …

3ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

Comments Off on 3ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்தது. இன்று மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், காஷ்மீரில் உள்ள அனந்தநாக்-ரஜோரி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் […]

Continue reading …