Home » Archives by category » இந்தியா (Page 24)

ராகுல் காந்தியின் திட்டம்!

Comments Off on ராகுல் காந்தியின் திட்டம்!

ராகுல் காந்தி இந்தியா கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சி கூட தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியின் சார்பில் ஒரு பொது தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் ராகுல் காந்தி இது குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் […]

Continue reading …

கவிதா ஆவேசம்!

Comments Off on கவிதா ஆவேசம்!

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் “இது சிபிஐ கஸ்டடி அல்ல பாஜக கஸ்டடி” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார். கவிதா கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் அவர் டில்லி திகார் திரையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று மீண்டும் அவர் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருடைய காவல் ஏப்ரல் […]

Continue reading …

2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கம்!

Comments Off on 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கம்!

ஒரே மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளம் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 2.13 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்ட விரோத செய்திகள் பரப்புதல், பாலியல் காணொளிகளை பரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேலான இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசிடம் எக்ஸ் தளம் குற்றம் […]

Continue reading …

கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு!

Comments Off on கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு!

ஏப்ரல் 23ம் தேதி வரை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்தார். இது தொடர்பாக அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் […]

Continue reading …

பறக்கும் படை சோதனையில் வரலாறு காணாத பணம் பறிமுதல்!

Comments Off on பறக்கும் படை சோதனையில் வரலாறு காணாத பணம் பறிமுதல்!

தேர்தல் ஆணையம் நாடு முழுதும் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை பறக்கும் படை சோதனையில் சுமார் ரூ.4,658 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 1-ம் தேதி தேர்தல் நிறைவடைந்து, ஜூன் […]

Continue reading …

அமித் ஷா ‘ரோடு ஷோ’!

Comments Off on அமித் ஷா ‘ரோடு ஷோ’!

மத்திய அமைச்சர் அமித் ஷா கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து தக்கலையில் ரோடு ஷோ மேற்கொண்டார். மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர்கள் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Continue reading …

கவிதா விசாரணை; நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!

Comments Off on கவிதா விசாரணை; நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!

ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் கவிதா ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரிடம் விசாரணை செய்தபோது டில்லி மதுபான கொள்கை முறைகேட்டில் விசாரணைக்கு […]

Continue reading …

காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து; மோடி வாக்குறுதி!

Comments Off on காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து; மோடி வாக்குறுதி!

பிரதமர் மோடி ஸ்ரீநகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், “காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அது மட்டுமின்றி விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும்” வாக்குறுதி அளித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் பிரிக்கப்பட்டது. காஷ்மீரில் சட்டசபை தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து பிரதமர் மோடி சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் “புதிய ஜம்மு காஷ்மீரை உருவாக்க நான் மும்முரமாக இருக்க வேண்டும். […]

Continue reading …

நிர்மலா சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

Comments Off on நிர்மலா சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதலமைச்சரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓசூர் ராம்நகரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி மற்றும் […]

Continue reading …

காங்கிரசை சாடிய ஜே.பி.நட்டா!

Comments Off on காங்கிரசை சாடிய ஜே.பி.நட்டா!

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது என்று தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மத்தியப் பிரதேச மாநிலம் சித்தியில் தேர்தல் பிரச்சாரத்தில், “முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது. அனைவரிடம் இருந்தும் வாக்குகளை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில சாதி, சமுதாயம் அல்லது பிரிவுகளுக்காக மட்டும் அரசாங்கத்தை அமைத்தது. காங்கிரஸ் கட்சி அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருக்கவில்லை. ஆனால், தற்போது பிரதமர் மோடி […]

Continue reading …