
செம்மரகடத்தல் தடுத்து நிறுத்திய போலிஸ் மீது கார் மோதி கொலை. இருவர் கைது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கே.வி பள்ளி அருகே இருக்கும் குன்றவாரி பள்ளி சாலை சந்திப்பு அருகே இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செம்மரக்கட்டைகளை காரில் ஒரு கும்பல் கடத்தி வந்த நிலையில் அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.நிற்காமல் சென்ற அந்த கார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் […]
Continue reading …
சென்னை முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார். அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது நேற்று மாலை சட்லெஜ் ஆற்றில் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை இயக்கிய ஓட்டுநர் செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆற்றில் விழுந்த ஆனால் வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அவரை தேடும் […]
Continue reading …
மர்ம நபர் ஒருவர் மும்பை நகரில் 6 முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், மும்பை நகரில் 6 முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்ற மிரட்டலுடன் தகவல் வந்ததாக மும்பை போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, மும்பை மாநகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு […]
Continue reading …
பிரதமர் மோடி அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் எனவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார். பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம் காலத்தின் […]
Continue reading …
பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. அந்த வரிசையில் ஆன்லைன் கட்டண நிறுவனமான PayPal பணி நீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் ஏராளமான நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்தது என்பதும் இதில் மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் இருந்தன. தற்போது மீண்டும் வருமானத்தை அதிகரிக்கவும் நஷ்டத்தை குறைக்கவும் ஒரு சில நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வகையில் உலகின் […]
Continue reading …
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த வருகிற 13-ம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு […]
Continue reading …
நாடாளுமன்றத்தில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தலைவர் திரௌபதி முர்மு உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி., எ.டி.கே.சுரேஷ்குமார் மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் பற்றி நேற்று கருத்துக் கூறிய தனிநாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாட்டை பிளவுப்படுத்துவது தொடர்பாக யார் பேசினாலும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பொருத்துக் கொள்ள மாட்டோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் ஒன்றுதான் என்று கூறியிருந்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் […]
Continue reading …
பாரதிய ஜனதாவுக்கு அயோத்தி கோயில் திறக்கப்பட்டதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் ராஜ்யசபா எம்பி ஆக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி ஒருவர் மட்டுமே கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரேபேலி என்ற தொகுதியில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி கூட அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். இம்முறை மீண்டும் சோனியா காந்தி […]
Continue reading …
Paytm பேமெண்ட் வங்கி சேவைகளை இந்திய ரிசர்வ் வங்கி இன்று முதல் நிறுத்தியதாக அறிவித்துள்ளது. இனி Paytm செயலில் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கு, ப்ரீபெய்டு கருவிகள், வாலட்கள் மற்றும் பாஸ்ட் டேக் போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்க RBI தடை விதித்துள்ளது. இந்தத நடவடிக்கை Paytm நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய பணம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்த Paytm நிறுவனம் 500 மில்லியன்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு […]
Continue reading …