
ஜெயக்குமார் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்த கேள்வி குறித்து அவர் பதிலளித்துள்ளார். வரும் 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்த கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவலும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே […]
Continue reading …
அரசியலில் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு புகுந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அரசியலை விட்டே விலகியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர்களில் ஒருவர் அம்பத்தி ராயுடு. இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு கடந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்தாண்டு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் அதைபேர்வெல் மேட்ச்சாக கொண்டு ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார் […]
Continue reading …
மேற்கு வங்கத்தில் உடனடியாக குடியசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகிய வலியுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தைக் கண்டித்து மேற்கு வங்கம் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் […]
Continue reading …
தமிழ்நாட்டில் இருந்து கிடைத்த வரியை விட அதிகமாக தமிழகத்திற்கு நிதி கொடுத்துள்ளோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தான் அதிக வரி கொடுக்கப்படுகிறது, ஆனால் தமிழகத்திற்கு குறைவான நிதிதான் வழங்கப்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தில், “தமிழகத்திற்கு மத்திய அரசால் 2014ம் ஆண்ட்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ.2,88,627 கோடி. இதில் மானியமாக […]
Continue reading …
ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் வரும் 22ம் தேதி வரை ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என உத்தரப் பிரதேசம் மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை அடுத்து மாநில போக்குவரத்து துறை இன்று முதல் வரும் 22ம் தேதி முதல் வரை உத்தரப்பிரதேச பேருந்துகளில் ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்று உத்தரவு […]
Continue reading …
எண்ணெய் டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர். லாரியின் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் டிவைடரில் மோதி, பக்கவாட்டில் கவிழ்ந்து தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னாவில் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் டேங்கர் லாரி தீப்பிடித்தது. இவ்விபத்தில் டேங்கர் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. ஆனால் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் எவ்வித காயமும் […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலின் போது எனது பிரச்சாரத்தை தடுக்கவே கைது நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “பாஜக என்னை கைது செய்ய விரும்புவது நேர்மையை கைது செய்ய விரும்புவதற்கு சமம், எனது மிகப்பெரிய சொத்து நேர்மை தான். அதை அவர்கள் கெடுக்க விரும்புகிறார்கள், எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என தெரிவித்துள்ளார். இன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சி தான் நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என்றும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலை நிறுத்தி நமது தேசத்தின் அடித்தளத்தை எழுப்புகிறது. முன்னதாக ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூர்னே கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் […]
Continue reading …
பாஜக கூட்டணியை இவ்வாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வீழ்த்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதும் 375 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியில் மொத்தம் 25 அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் மட்டுமே 375 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதமுள்ள 175 தொகுதிகள் மட்டுமே மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் என்பதால் இந்தியா […]
Continue reading …
பிரதமர் மோடி இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு வருவதில் பெருமிதம் கொள்வதாக பேசினார். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். இதுகுறித்து அவர் பேசும்போது, “இவ்வாண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் முதல் அரசு நிகழ்ச்சியாகவும் தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது, பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை.களை தொடங்கினர். […]
Continue reading …