Home » Archives by category » இந்தியா (Page 38)

தமிழகம் வருகிறார் கார்கே!

Comments Off on தமிழகம் வருகிறார் கார்கே!

காங்கிரஸ் தலைவர் கார்கே கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என கடந்த தேர்தலில் அறிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தலைவர் கார்கே தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் […]

Continue reading …

இஸ்ரோ தலைவர் சோமநாத் போட்டியா?

Comments Off on இஸ்ரோ தலைவர் சோமநாத் போட்டியா?

இஸ்ரோ தலைவர் சோமநாத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெ உள்ளது. பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கேரள மாநிலத்தில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. பாரதிய ஜனதா இந்த மாநிலத்தில் மிகவும் குறைவான வாக்கு சதவீதத்தை கொண்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் […]

Continue reading …

தேனிலவுக்கு ராமர் கோவிலா? விவாகரத்து கேட்ட மனைவி!

Comments Off on தேனிலவுக்கு ராமர் கோவிலா? விவாகரத்து கேட்ட மனைவி!

இளம் மனைவி தேன் நிலவுக்கு கோவா அழைத்து செல்வதாக தன்னிடம் கூறிவிட்டு அதன் பிறகு தனது கணவர் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்ற ராமர் கோவிலுக்கு அழைத்துச் சென்றதால் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் போபாலை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி தனது கணவரிடம் தேன்நிலவுக்கு கோவா அழைத்துச் செல்லுமாறு கூறியிருந்தார். கணவரும் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தார். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கணவரின் தாயார் கூறியதாக […]

Continue reading …

மேரி கோம் ஓய்வு..!

Comments Off on மேரி கோம் ஓய்வு..!

பிரபல இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேரி கோம் 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்று சாதனை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர். 2014ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றார். இவ்வாறு குத்து சண்டையில் பல சாதனைகளை படைத்து […]

Continue reading …

நீதிபதி தொடர்ந்த வழக்கு!

Comments Off on நீதிபதி தொடர்ந்த வழக்கு!

நீதிபதி ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக கொண்டாட்டத்தால் முடங்கிய சாலைகளின் போக்குவரத்தால் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். அயோத்தியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராமர் கோவில் திறக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ராமர் கோவிலில் கொண்டாட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றது. இந்த ஊர்வலங்களால் ஒரு சில நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. ராமர் கோவில் திறப்பு விழாவின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தினால் நீதிமன்றத்திற்கு செல்லும் சாலை முடக்கப்பட்டது குறித்து தாமாக முன்வந்து ராஜஸ்தான் […]

Continue reading …

கூட்டணி இல்லை.. ஆம் ஆத்மி அறிவிப்பு!

Comments Off on கூட்டணி இல்லை.. ஆம் ஆத்மி அறிவிப்பு!

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்லை என்று அறிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஆனால் அந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இன்று இதனிடையே மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளனர். […]

Continue reading …

பங்குச்சந்தை வர்த்தக நேரம் மாற்றம் பற்றிய அறிவிப்பு!

Comments Off on பங்குச்சந்தை வர்த்தக நேரம் மாற்றம் பற்றிய அறிவிப்பு!

வரும் திங்கட்கிழமையன்று ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் பங்குச்சந்தை நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாக இன்றும் பங்குச்சந்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து மத்திய அரசு அலுவலகங்கள் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி பங்குச்சந்தை காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2:30 மணிக்கு வர்த்தகம் தொடங்கி மாலை 5 மணி வரை செயல்படும் என்று இந்திய […]

Continue reading …

ஐரோப்பியாவில் இந்திய அரசுக்கு எதிராக தீர்மானம்!

Comments Off on ஐரோப்பியாவில் இந்திய அரசுக்கு எதிராக தீர்மானம்!

இந்திய அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் தேசியவாத பிரிவினை கொள்கைகள் பற்றி கவலை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மணிப்பூர் உட்பட சமூக மோதல்களை தூண்டும் வகையில் இந்தியாவில் உள்ள தலைவர்கள் அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள், அடிப்பட சுதந்திரங்கள் கவலைக்குருய சூழ்ல் நிலையை கண்காணிக்க வேண்டிய அவசியமிருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு தீர்மான […]

Continue reading …

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

Comments Off on கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. விழாவின் தொடக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை […]

Continue reading …

மொபைல் பாஸ்வேர்டு தராததால் மாணவன் கொலை!

Comments Off on மொபைல் பாஸ்வேர்டு தராததால் மாணவன் கொலை!

நான்கு நண்பர்கள் மொபைல் கேம் பாஸ்வேர்டு தராததால் ஒரு மாணவனை கொலை செய்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பாப்பை தாஸ் என்ற 18 வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் தனது சக நண்பர்களுக்கு மொபைல் பாஸ்வேர்டை கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நான்கு நண்பர்கள் பாப்பை தாஸ் என்ற மாணவனை கொலை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து நான்கு நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து […]

Continue reading …