
பாஜக மகளிர் அணி தலைவி “பிரதமரை எதிர்த்து நீங்களே போட்டியிடலாமே?” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மகளிர் அணி தலைவர் அக்னிமித்ர பால் “மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை எதிர்த்து இந்தியா கூட்டணி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறிய நிலையில் பாஜக […]
Continue reading …
உலக சுகாதார மையம் உலகம் முழுதும் ஒரே மாதத்தில் 52% கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 28 நாட்களில் மட்டும் உலகம் முழுதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3000க்கும் மேற்பட்டோர் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான மீட்பு பணிகளுக்காக, மத்திய அரசிடம் நிதி கோரியிருந்தது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு உரிய மரியாதை கொடுக்கிறோம். அரசியலில் முன்னுக்கு வர நினைக்கும் அவருக்கு இது நல்லதல்ல. இதைக் காழ்புணர்வுடன் கூறவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமில்லை” என்று என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதற்கு […]
Continue reading …
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வானிலை மையம் அதிநவீனமானது, உரிய வானிலை முன்னெச்சரிக்கையை முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியின்போது, “அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வானிலை ஆய்வு மையம் வழங்கியது, ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது, வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, […]
Continue reading …
மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகாரளித்தனர். மேலும், பிரிஜ்பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டில்லி ஜந்தர் மந்தரில் அவர்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை அடுத்து, நடைபெற்ற விசாரணையின் இறுதியில், பிரிஜ் பூஷன் சிங் சஸ்பெண்ட் […]
Continue reading …
அயோத்தியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் பிரமுகர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் […]
Continue reading …
லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் மாநில எல்லைகளில் உள்ள அனைத்து ஆர்டிஓ சோதனை சாவடிகள் மற்றும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் அளித்த பேட்டியில், “இந்தியா முழுக்க உள்ள சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். 16 மாநிலங்களில் இந்த சோதனை சாவடிகள் எடுக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் உள்ள […]
Continue reading …
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், நேற்றைய இந்தியா கூட்டணியில் “ஹிந்தி ஒரு தேசிய மொழி, அதை திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக நிதிஷ்குமார் பேச்சுக்கு அமைதியாக இருந்தது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பாஜகவின் முக்கிய பிரமுகருமான நாராயணன் திருப்பதி இது குறித்து கூறும்போது, “ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் […]
Continue reading …
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மத்திய பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு விட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக விளக்கமளிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமலில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவைச் சேர்ந்த 141 எதிர்க்கட்சி எம்.பிக்கள் அதிரடியாக -சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய வரலாற்றில் 141 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் […]
Continue reading …
ராமர் கோவில் அறக்கட்டளை ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அத்வானி மற்றும் ஜோஷி வர வேண்டாம் என்று தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 4000 சாமியார்கள் 2200 சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். அத்வானிக்கு 96 வயது ஆவதாலும், ஜோஷிக்கு 90 வயது ஆவதால் இருவரும் வயதை கணக்கில் கொண்டு ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். […]
Continue reading …