
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் முதல் ஆப்பிள் ரிடெய்ல் ஸ்டோரை மும்பையில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. உலகளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. உலகின் பல நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என பிரத்யேக ஷோரூம் உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆப்பிள் ரீடைல் ஸ்டோர் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை திறக்கப் […]
Continue reading …
பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தெலுங்கான மாவட்டத்தில் நடைபெற்ற வருகிறது. இத்தேர்வில் இந்தி பாடத்தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் இந்தி தேர்வு வினாத்தாள் வெளியானதால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு இந்தி பாடத் தேர்வு […]
Continue reading …
பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு ஆன்லைனில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி பரிசு விழுந்துள்ளது. பரிசு பெற்ற நபர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். பெங்களூரை சேர்ந்த அருண்குமார் ஆன்லைன் மூலம் வளைகுடா நாடான அபுதாபியில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். கடந்த 3ம் தேதி குலுக்கல் நடைபெற்ற போது அதில் முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் 44 கோடி ரூபாய் பரிசு அருண்குமாருக்கு கிடைத்தது. இதனிடம் அவரிடம் […]
Continue reading …
ஓடும் ரயிலுக்கு திடீரென மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ள சம்பவத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூருக்கு விரைவு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. இந்த ரயில் கோழிக்கோடு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது அதில் பயணித்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை ரயிலில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதை கண்டு அலறிய பயணிகள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். சிலர் செயினை […]
Continue reading …
டிஜிபி பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வரவிருப்பதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வருகிறார் என்பதும் அன்றைய தினம் அவர் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் வருகையை ஒட்டி தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை கமிஷனர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
Continue reading …
மாதம் 1ம் தேதியானால் சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளியாவது வழக்கமாகி விட்டது. அவ்வகையில் இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 76 குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.2,268 என விற்பனையாகி வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் இன்று முதல் 76 குறைந்து 2012 ரூபாய் என விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு பயன்களுக்கு உபயோகப்படுத்தப்படும் […]
Continue reading …
ரஷ்யா இந்தியாவும் சீனாவும் எங்கள் முக்கிய கூட்டு நாடுகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் சீனா மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவளித்து, போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய […]
Continue reading …
மராட்டியத்தில், சிவசேனாவினின் (உத்தவ் அணி) எம்பி.சஞ்சய் ராவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் சிவசேனா( உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற மேலவை எம்பியாக சஞ்சய் ராவத் உள்ளார். இவருக்கு பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற லாரன்ஸ் பிஸ்க்னோய் கும்பலிடமிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளது. இதுபற்றி அவர் போலீஸீல் புகாரளித்துள்ளார். அதில்,’டெல்லியில் வந்து என்னைச் சந்தித்துப் பார்..ஏகே.47 ரக துப்பாக்கியால் சுட்டுக் […]
Continue reading …
நோக்கியா நிறுவனம் நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் பற்றிய மாஸ் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பூமியில் தான் தற்போது 4ஜி, 5ஜி என நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் இவ்வாண்டு இறுதிக்குள் அமைக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் தகவல் தொடர்பினை மேம்படுத்த பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்க இந்த […]
Continue reading …
பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் குணமடைய பிரார்த்திப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வாடிகானில் வாழ்ந்து வரும் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நிலை சீராகி வருகிறது. இன்னும் சில நாட்கள் மருத்துவரின் அறிவுரையின்படி அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வாடிகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்தவாரம் நடைபெறும் புனித […]
Continue reading …