
வருமான வரித்துறை அதிகாரிகள் சில முக்கிய மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். மலையாள நடிகரும்,- தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரன் உட்பட திரைப்பட தயாரிப்பாளர்களின் “வெளிப்படையாத வெளிநாட்டு முதலீடுகளை” கண்டறிய கேரளா, தமிழ்நாடு மற்றும் மும்பையில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வியாழன் காலை 8 மணிக்குத் தொடங்கிய இத்தேடுதல்கள் நள்ளிரவு வரை நடந்ததுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் […]
Continue reading …
தலைநகர் டில்லியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் ஒருவர் முதல் மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தூக்கியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை முதல் தளத்தில் உள்ள வகுப்பிலிருந்து ஆசிரியை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தார். இச்சம்பவத்தில் மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஆசிரியையை […]
Continue reading …
4 கால்களுடன் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு பிறந்துள்ளது. நாள்தோறும் இந்த உலகில் அதிசயம் மற்றும் ஆச்சர்யங்கள் கொண்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா என்ற கர்ப்பிணி ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பிரசவித்தார். இந்த குழந்தைக்கு 4 கால்கள் இருந்ததால், அதைப் பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். 2.3 கிலோ எடையுடன் பிறந்து இக்குழந்தை நல்ல […]
Continue reading …
தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மகன் திருமண வரவேற்பிற்கு கேரளாவிலிருந்து இரண்டு யானைகள் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மதுரையில் நடந்த கஜபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யானைகள் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழக அமைச்சர் மகன் திருமணம் நடைபெறும் இடத்தில் யானைகள் நிறுத்தப்பட்டன என தெரிகிறது. செப்டம்பர் 30 அன்று நடந்த நிகழ்விற்கு விருந்தினர்களை வரவேற்க விலங்குகள் பயன்படுத்தப்பட்டன என்று ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது. சமீபத்தில் ஆர்டிஐ தாக்கல் செய்யப்பட்டதை […]
Continue reading …
பள்ளி மாணவிகள் சேர்ந்து தலைமை ஆசிரியரை கட்டி வைத்து உதைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் மாணவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இது ஒரு தகவல் தெரிந்தவுடன் சக மாணவிகள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியரை கயிற்றால் கட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தலைமையாசிரியர் மது போதையில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் […]
Continue reading …
தன் தந்தையை 30 துண்டுகளாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பாகல் கோட் மாவட்டத்திலுள்ள முதோல் நகரில் வசித்த பரசுராம் குலாலியின் மகன் வித்தலா(20). பரசுராம் குலாலி, தினமும் குடித்துவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இதேபோல், குலாலி, தன் மகன் வித்தலாவை எதோ பேசியதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தவே, ஆத்திரமடைந்த வித்தலா, […]
Continue reading …
தலைநகர் டில்லியில் உள்ள துவாரகா எனும் பகுதியில் 17 வயது சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லி யூனியனில் உள்ள துவாரகாவில் இன்று காலை 9 மணிக்கு 17 வயது பள்ளி சிறுமி ஒருவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு சக்கரவாகனத்தில் வந்த 2 பேர் சிறுமியின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டனர். இதில், சிறுமியின் முகம், கண்கள் பாதிக்கப்பட்டு, அவரது வலியால் துடித்துள்ளார், தற்போது ஆபத்தான நிலையில் […]
Continue reading …
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி என்பவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து ஆந்திர மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றம் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்கள் மூன்று பேரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டிருந்தது. இன்று நீதிமன்ற ஆணையை அமல்படுத்தவில்லை என ஊழியர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு திருமலை -திருப்பதி தேவஸ்தான […]
Continue reading …
தொழிலதிபர் ஒருவர் போலி சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் பணத்தை இழந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது. காவல்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல போலியாக நடித்து ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் ஆங்காங்கே அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் பொவானிப்பூரில் உள்ள ரூப்சந்த் முகர்ஜி லேன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் வாத்வா. இவர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் […]
Continue reading …