Home » Archives by category » இந்தியா (Page 93)

மருத்துவ ஆராய்ச்சி இணையதளம் 6000 முறை ஹேக்கிங்!

Comments Off on மருத்துவ ஆராய்ச்சி இணையதளம் 6000 முறை ஹேக்கிங்!

24 மணி நேரத்தில் 6000 முறை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது. எய்ம்ஸ் சேவையகங்கள் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்ட நிலையில், ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள பிற சுகாதார மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணையதளம் மற்றும் நோயாளிகள் தகவல் அமைப்பு மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். நவம்பர் 30 அன்று சைபர் ஹேக்கர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை 24 மணி நேரத்தில் 6000 முறை தாக்க (ஹேக்) முயன்றனர் என்று […]

Continue reading …

ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Comments Off on ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. சற்று முன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 0.35% ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 5.9% என இருந்த நிலையில் தற்போது 0.35% உயர்ந்து இருப்பதால் 6.25 சதவீதம் என அதிகரிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதன் காரணமாக […]

Continue reading …

தியேட்டர்களில் அழுகை அறையா?

Comments Off on தியேட்டர்களில் அழுகை அறையா?

கேரளா அரசு தியேட்டரில் அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கைக்குழந்தையுடன் தியேட்டருக்கு வரும் பெற்றோர்கள் திடீரென குழந்தை அழுதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். இவர்களுடைய நலன் கருதி கண்ணாடியால் மூடப்பட்ட அறை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த அறையில் குழந்தை அழுதாலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காதாம். குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்காதவாறு அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய பொருள்களும் இந்த அறையில் கிடைக்கும். அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

Comments Off on கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

வூஹான் மாகாண ஆய்வுகூடத்தில் பணியாற்றிய நபர் தன் புத்தகத்தில் கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்ற தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீன தேசத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது. இதனால், உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர். கொரொனாவின் உருமாறிய வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5ம் அலை விரைவில் பரவலாம் என […]

Continue reading …

பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை!

Comments Off on பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உலக நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தி பிரதமர் மோடி மீது உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜி20 உலக நாடுகளின் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இவ்வாண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக ஜி20 மாநாட்டில் அடுத்த ஆண்டிற்கான தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அரசு இப்போதிருந்தே தயாராகி வருகிறது. ஜி20 மாநாட்டை […]

Continue reading …

சிறுமியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

Comments Off on சிறுமியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

18 வயது சிறுமியை ஒரு தலைக்காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் அயில் நிலையத்திற்கு நேற்று மாலை வந்த ரயிலிலிருந்து 18 வயது சிறுமி இறங்கியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற 22 வயது இளைஞர் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அவரும் தன்னைத் தானே கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். […]

Continue reading …

6 பேர் அமரும் வாகனத்தை கண்டுபிடித்த இளைஞர்!

Comments Off on 6 பேர் அமரும் வாகனத்தை கண்டுபிடித்த இளைஞர்!

ஆறு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் பேட்டரி வாகனத்தை வடிவமைத்துள்ள இளைஞரை பிரபல கார் நிறுவன தலைவர் பாராட்டியுள்ளார். முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவின் தலைவர் ஆனத் மகிந்திரா. புதுமை விரும்பி மற்றும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களை கண்டறிந்து பாராட்டும் பண்புடையவர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன் டுவிட்டர் பக்கத்தில், 6 பேர் அமரும் வகையில், ஒரு இருசக்கர வாகனத்தை உருவாக்கிய இளைஞரின் கண்டுப்பிடிப்பு மற்றும் திறமையை பாராட்டியுள்ளார். மேலும், இது […]

Continue reading …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தகவல்!

Comments Off on நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தகவல்!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிஎஸ்டி வரை முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒன்பது மாதங்களாக இந்தியாவில் ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடிக்கு மேல் வசூல் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,45,867 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல். இந்தவசூல் தொகை கடந்த ஆண்டு நவம்பரை விட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 9 […]

Continue reading …

வாட்ஸ் அப்பின் அதிர்ச்சியான தகவல்!

Comments Off on வாட்ஸ் அப்பின் அதிர்ச்சியான தகவல்!

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு சமூக வலைதளங்கள் ஒவ்வொரு மாதமும் முறைகேடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் குறித்த அறிக்கையை அளித்து வருகின்றன. அவ்வகையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் இருபத்தி மூன்று லட்சத்து இருபத்தி நான்காயிரம் கணக்குகளை முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலான கணக்கூகள் விதிமுறைகளை மீறி செயல் பட்டதன் காரணமாகவும், ஒரு சில கணக்குகள் […]

Continue reading …

கணவன் மனைவிக்கு இன்சூரன்ஸ் போட்டு கொலை!

Comments Off on கணவன் மனைவிக்கு இன்சூரன்ஸ் போட்டு கொலை!

கணவர் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை கூலிப்படை மூலம் கொலை செய்த சம்பவம் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர் மகேஷ் சந்திராவின் மனைவி ஷாலு தேவி. இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். சமீபத்தில் ஷாலு தேவி தனது சகோதரர் ஒருவருடன் பைக்கில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று மோதியதில் பலியானார். இந்த வழக்கை விபத்து என போலீஸ் முடிக்க இருந்த நிலையில் ஷாலுவின் கணவர் மகேஷ் சந்திரா மீது சந்தேகம் […]

Continue reading …