Home » Archives by category » உலகம் (Page 3)

பிரதமர் மோடிக்கு ஆஸ்திரியாவில் வரவேற்பு!

Comments Off on பிரதமர் மோடிக்கு ஆஸ்திரியாவில் வரவேற்பு!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அங்கு அவர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதோடு அதிபர் புதினுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் இன்று ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று உள்ளார். அந்நாட்டில் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, மாஸ்கோவிலிருந்து ஆஸ்திரியாவிற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றுள்ளார். அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் […]

Continue reading …

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்?

Comments Off on அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்?

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய வேட்பாளர் ஜோ பைடனுக்கு பதில் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் சமீபத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்த நிலையில் அதில் ஜோபைடன் வாதிட திணறியதாகவும் கூறப்பட்டது. ஜோ பைடனுக்கு வாதிடம் திறன் மோசமாக இருப்பதால் அவர் வெற்றி பெறுவது கடினம் என்றும் எனவே […]

Continue reading …

சானியா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது தந்தை!

Comments Off on சானியா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது தந்தை!

இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர். இதற்கிடையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சானியா மிர்சா சோயிப் மாலிக்கை பிரிந்தார். மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனேயே சானியா மிர்சா இந்திய கிரிக்கெட் வீரர் […]

Continue reading …

ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Comments Off on ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டும், அது அழிவிற்கு காரணமாக இருந்து விடக்கூடாது வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பை ஏற்று இத்தாலி சென்றார். போப் பிரான்சிஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். போப் பிரான்சிஸை பிரதமர் மோடி ஆரத்தழுவி தனது அன்பை […]

Continue reading …

ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Comments Off on ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஏலியன்கள் மனித உருவத்தில் வாழத் தொடங்கிவிட்டதாக பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்கள் வாழும் ஒரே கிரகமாக தற்போதைய அறிவியல் நிலவரப்படி பூமி மட்டுமே உள்ளது. ஆனால், நாம் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் வேறு சில கிரகங்களில் நம்மைப்போல உயிரினங்கள் வாழலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்து வருகிறது. அந்த வெளிக்கிரக உயிர்களை குறிக்கும் சொல்தான் ஏலியன். உலகிலேயே ஏலியன் குறித்த கற்பனைகள் அதிகம் உலாவும் நாடு அமெரிக்கா. […]

Continue reading …

பங்குச்சந்தையில் முன்னணியில் ஆப்பிள்?

Comments Off on பங்குச்சந்தையில் முன்னணியில் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனம் நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை முந்தியுள்ளது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4% உயர்ந்தது. அதன் சந்தை மதிப்பு 3.29 ட்ரில்லியன் டாலரை எட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.24 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. சமீபத்தில் நடந்த ஆப்பிள் உலக டெவலப்பர் மாநாட்டில் ஏஐ குறித்து அறிவிப்பை ஆப்பிள் […]

Continue reading …

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.

Comments Off on குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.

குவைத் மங்காப் பகுதியில் நேற்று அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் 42 பேர் இந்தியர்கள் ( கேரளா 25 பேர்) மற்றவர்கள்   பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. குவைத்தின் மங்காப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. அஹ்மதி மற்றும் முபாரக் அல் கபீர் கவர்னரேட்டுகளில் உள்ள அரசு வழக்குத் துறையின் […]

Continue reading …

இளம்பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு!

Comments Off on இளம்பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு!

மலைபாம்பு ஒன்று இளம்பெண்ணை முழுமையாக விழுங்கியுள்ளது. அந்த மலை பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திடீரென காணாமல் போனதை எடுத்து அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு பெரிய வயிற்றுடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த மலைப்பாம்பை பிடித்து அதன் வயிற்றை கிழித்து பார்த்தபோது இளம்பெண்ணின் தலை மற்றும் உடல் தனி தனியாக இருந்ததை பார்த்து […]

Continue reading …

சென்செக்ஸ் 4300 புள்ளிகள் சரிவு!

Comments Off on சென்செக்ஸ் 4300 புள்ளிகள் சரிவு!

இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாஜக தனித்து ஆட்சியமைக்க வழி இல்லை என்பதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் பாஜக கூட்டணி 295 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பங்குச்சந்தை இன்று காலை […]

Continue reading …

தமிழர்களுக்கு நாமல் ராஜபக்சே வேண்டுகோள்!

Comments Off on தமிழர்களுக்கு நாமல் ராஜபக்சே வேண்டுகோள்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாமல் ராஜபக்சே இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவும் உள்ளார். அவர் மட்டக்களப்பில் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடிய போது, “அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளை அடிக்கப்படுகிறது, தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். இலங்கையில் வரும் அக்டோபர் 17ம் தேதி அதிபர் தேர்தல் […]

Continue reading …