சுதந்திர தினத்திற்காக அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளதால் சென்னையில் மூன்று நாட்களுக்கு பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் குறித்து மாநகர போக்குவரத்து துறையின் அறிவிப்பு இதோ… 05,09,13.08.2024 ஆகிய நாட்களில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருப்பதால் காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்கண்ட சாலலகளில் தற்பொழுது நடைமுறைகளில் உள்ள போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில் […]
Continue reading …தனது அக்காவிடம் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த ஜெயசித்ரா என்ற 40 வயது பெண் காவல்துறை அதிகாரி செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அயனாவரத்தில் உள்ள தனது வீட்டில் அக்காவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு வாந்தி வந்ததாக தெரிகிறது. […]
Continue reading …சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் […]
Continue reading …அதிமுக பிரமுகர் தாம்பரம் பகுதியில் நடந்த கோவில் தீமிதி திருவிழாவில் அவரது மனைவியுடன் தவறி தீயில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஊர்களிலும் ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடந்து வருகின்றது. அவ்வாறாக தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று தீமிதி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவிற்கு அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலரும், அதிமுக தாம்பரம் மாநகர பொருளாளருமான மாணிக்கம், […]
Continue reading …சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அவ்வகையில் இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு மழை பெய்யும் 30 மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]
Continue reading …இசை ரசிகர்களுக்கு எப்போதும் எவர் கிரீன் ஹிட் கொடுப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ‘ஹி1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் […]
Continue reading …ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.2080 குறைந்து, ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த அக்டோபரில் இஸ்ரேல் -பாலஸ்தீன மோதல் தொடங்கிய பின்னர் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,000ஐ கடந்து விற்பனையானது. இதற்கு பல்வேறு கரணங்கள் இருந்து வந்தாலும் அரசின் சுங்க வரியும் முக்கிய காரணமாக இருந்து வந்தது. […]
Continue reading …பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆம்ஸ்ட்ராங் கொலையின் மூலம் சென்னையில் அரசியல்வாதிகள் பின்னணியில் ராஜாங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் நடைபெறும் சம்பவங்கள், காவல் துறையின் நடவடிக்கைகள், கைதுகள், அதனை தொடர்ந்து வரும் செய்திகள் அனைத்தும், இத்தனை காலம் சென்னை மாநகரம் ரவுடிகளின் ராஜ்யத்தில் எவ்வாறு இருந்து வந்தது என்பதை தெளிவாக்குகிறது. அரசியல் போர்வையில், அரசியல்வாதிகளின் பின்னணியில் இந்த ராஜாங்கம் நடைபெற்றுக் […]
Continue reading …“விடாமுயற்சி” படத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தது. சற்றுமுன் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் “விடாமுயற்சி” அப்டேட் இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். “விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜித், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த […]
Continue reading …77 குற்றவாளிகள் சென்னையில் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்திப்ராய் ரத்தோர், அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-ஆக இருந்த அருண், சென்னை புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தனது முதல் பேட்டியிலேயே […]
Continue reading …