முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருமுல்லைவாயலில் குடியிருக்கும் நரிக்குறவர் இன மக்களை சந்தித்தார். அப்போது அவர் குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் ஆவடி பஸ்நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்றார். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாயை திறந்து வைத்தார். பின்னர் நரிக்குறவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். இது மட்டுமின்றி அங்கு மாணவிகளின் வீட்டில் இட்லி மற்றும் வடை சாப்பிட்டு மாணவிகளுக்கு […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழருக்கு உதவிட கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்பட இலங்கை மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அம்பத்தூரில் உள்ள டி1 போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை, அம்பத்தூரில் டி1 போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சட்ட ஒழுங்கு ஆய்வாளரின் அறையில் அமர்ந்து, பொதுமக்கள் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Continue reading …உயர்நீதிமன்றம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கி வருகிறது என்று வேதனையை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் இன்று பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது. அப்போது, “அரசு நிலங்களைப் பாதுகாப்பு வருவாய் துறை அதிகாரிகள் கடமை, ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கி வருகிறது. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் உதாவது” என்று தெரிவித்துள்ளது.
Continue reading …மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய தடை விதித்துள்ளது கேந்திரிய வித்யாலாய பள்ளி. ஆனால் இந்த புதிய தடைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர் மத்திய மாநில அரசு அலுவலக ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய பள்ளிகளில் சேர்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரைக் கடிதமும் வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. இந்த நிலையில் இனிமேல் எம்பிக்களுக்கு […]
Continue reading …தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் இருப்போர் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை தமிழ் புத்தாண்டு, நாளை மறுநாள் புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள் ரயில்கள் மற்றும் மனங்களில் செல்ல தொடங்கியுள்ளனர். […]
Continue reading …சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு சென்னையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டைக்கு இடையே உயர்மட்ட சாலை அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை ஐந்து முக்கியமான சிக்னல்கள் இருப்பதால், வாகனங்கள் தினமும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தள்ளார். இதற்காக 475 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Continue reading …குறித்த தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வைத்துள்ள மக்கள் தங்கள் சொத்து வரியை ஏப்ரல் 15க்குள் செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி, “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை, மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் வாயிலாகவும், மாநகராட்சி […]
Continue reading …பாஜக ஒருநாளும் இந்தி திணிப்பை அனுமதிக்காது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாலை கூறியுள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக பல கட்சிகள் குற்றம் சாட்டி பேசி வருகின்றன. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது. ஏ.ஆர்.ரஹ்மான் தமிழை இணைப்பு மொழி என […]
Continue reading …அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு இரண்டூ “கல்”தான் காரணம் என்று பெருமிதமாக பேசியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக ஆட்சிக்கு வருவதற்கு 2 “கல்”தான் காரணம் என்றும், அவற்றில் ஒரு கல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் மக்கள் நம்பிக்கையுடன் கொடுத்த மனுக்கள் என்றும் இன்னொரு கல் இளைஞர் அணி தலைவர் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய செங்கல் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் […]
Continue reading …