அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவரது மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ” தமிழகத்தின் […]
Continue reading …தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோ பாராலிம்பிக்சில் வெற்றி பெற்றவர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி : தேசிய விளையாட்டு நாளன்று டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்குப் பதக்க மழை பொழிகிறது. உயரம் தாண்டுதல் மற்றும் வட்டு எறிதலில் ஆசிய சாதனையுடன் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள நிஷாத் குமார், வினோத் குமார் ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Continue reading …உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரஹாவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், தற்சார்பு இந்தியாவை நோக்கிய முக்கிய நடவடிக்கைகளில் இது ஒன்று என்றும், புதிய கப்பல் வடிவமைப்பு முதல் கட்டமைப்பு வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதென்றும் கூறினார். இந்திய ராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஒன்று அல்லது இரண்டு கப்பல்களுக்காக அல்லாமல், 7 கப்பல்களுக்கான ஒப்பந்தம் தனியார் துறை நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. […]
Continue reading …சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதியரசரான எம்.எம்.சுந்தரேஷ் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு நீதியரசர் உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று சென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாட்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதிகள் பணியிடங்களில் 10 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் நோக்கத்துடன் 9 நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரையுடன் மத்திய அரசு நியமித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள […]
Continue reading …மேக்கேதாட்டில் கர்நாடகம் அணை கட்டினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குக் கர்நாடகத்திலிருந்து திறக்க வேண்டிய தண்ணீரை மட்டுமின்றி, அம்மாநில அணைகளிலிருந்து மிகையாக வெளியேறும் காவிரி வெள்ள நீரையும் கர்நாடக அரசு தேக்கிக் கொள்ளும். இதன் காரணமாகவே, மேக்கேத்தாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்கும் வேலைகளை இந்திய அரசு […]
Continue reading …கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிற மாணவர்களுக்கு உயர்கல்வி கொடுப்பது அரசின் கடமை. அதற்கான முறையில் கல்விக்கடன் திட்டத்தை உருவாக்கி அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அதன் படிநிலைகளுள் முதலானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கப்படும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் கல்விக் கனவுகளை பாதித்துள்ளது. எனவே இது குறித்து மதுரை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை […]
Continue reading …தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாகவும், அது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமெனவும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை நாடெங்கிலும் பன்மடங்காக உயர்த்தி, அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, சமையல் எரிகாற்று உருளையின் விலையையும் அதிகரிக்கச்செய்துவிட்டு, இப்போது சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் உயர்த்த எண்ணும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் வன்செயல் பெரும் சினத்தையும், கடும் […]
Continue reading …மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் புதிய TISA சுற்றுத் தர அமைப்பு மற்றும் புதிய மின்மாற்றியை நீல கடற்கரை சாலை, நீலாங்கரையில் இன்று (25.08.2021) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்கள். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், இயக்குநர் மின் பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர். கடந்த 2015 முதல் […]
Continue reading …ரக்ஷாபந்தன் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “ரக்ஷாபந்தன் என்ற புனித தருணத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமூகத்தில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பு மற்றும் பாசத்தின் வலுவான பிணைப்பை ரக்ஷாபந்தன் பண்டிகை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரிக்கு இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்பு, பரஸ்பர மரியாதை மற்றும் கருணையில் அமைந்துள்ள இந்த தனித்துவம் வாய்ந்த பந்தத்தை ரக்ஷாபந்தன் கௌரவிக்கிறது. நமது சமூகத்தில் பெண்களுக்கு பாரம்பரியமாக அளிக்கப்படும் உயர்ந்த நிலையையும் இந்த திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது. இந்தத் தருணத்தில் நம் நாட்டில் உள்ள பெண்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் நம்மை நாமே மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம். ரக்ஷாபந்தன் என்ற புனித திருநாளன்று நம் நாட்டு குடிமக்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
Continue reading …தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21.08.2021) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]
Continue reading …