பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் அதாவது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள் பயனர்களுக்கு அதிக டேட்டா, 1 ஜிபிபிஎஸ் வரை ஸ்பீட் மற்றும் பல OTT இயங்குதளங்களின் இலவச சந்தா ஆகியவற்றைக் கொண்டு நன்மைகளை வழங்குகின்றன, இது மக்களை நிறைய சேமிக்கிறது. ஜியோ ஃபைபருக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிகவும் பிரபலமான பிராட்பேண்ட் வழங்குநராக பாரதி ஏர்டெல் உள்ளது, மேலும் இது பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் பாரதி ஏர்டெல்லின் பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ […]
Continue reading …சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகின்ற 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்பட வேண்டும். ஆடு,மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் […]
Continue reading …நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள், அதாவது 31 -ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். இதனால், அவரது அறிவிப்புக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை தாம் கைவிடுவதாகவும், அதற்காக ரசிகர்களும், பொது மக்களும் தன்னை மன்னிக்க […]
Continue reading …இன்று சேலம் எடப்பாடித்தொகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, ‘பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது, ‘ பொங்கல் பண்டிகை வருவதை யொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும். இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு […]
Continue reading …முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் பணி கடந்த 2 ஆண்டுகளாக நினைவிட கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நினைவிடத்தின் மையப்பகுதியில் பீனிக்ஸ் பறவை, இடது புறத்தில் அறிவு சார் பூங்கா, வலது புறத்தில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது. இதை தவிர்த்து நடைபாதை, குடிநீர் வசதி, செயற்கை நீரூற்று உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த பீனிக்ஸ் பறவை இறக்கை வடிவமைப்பு பணி கடந்த நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் […]
Continue reading …சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய காவல்நிலையத்தை சென்னை மாநகரா காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்து வைத்து, காவல் நிலைய பணிகளை துவக்கி வைத்தார். பெரும்பாக்கம், எழில்நகர், 8 மாடி அடுக்குக் குடியிருப்பு வளாகத்தில் இந்த புதிய காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல்நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை வாழ்த்தினார். காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார். இப்புதிய காவல்நிலையத்தின் ஆய்வாளர் ரஞ்சித் குமாரின் செல்லிடப்பேசி எண்களான 9840619597 […]
Continue reading …சென்னை கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட சோதனை 210 பேருக்கு கொரோனா!! சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 210 பேருக்கு கரோனா உறுதியானதாக சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது. ‘டிசம்பர் 16- ஆம் தேதி வரை சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 6,344 கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 210 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது; 3,773 பேருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது. இன்னும் 2,361 பேரின் பரிசோதனை முடிவுகள் […]
Continue reading …அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!! தமிழ்நாட்டில் அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகியவற்றை தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் முதல் மொழியாக தமிழ், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப்பட்டுவரும் நிலையில், தொன்மையான தமிழ்மொழி அரசு […]
Continue reading …ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கை வெட்டப்படும் என்றும், ஆ.ராசா வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது என காட்டமாக கூறினார். காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ.ராசா என்று விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக ராசாவும் கனிமொழியும் திகார் சிறையில் இருந்தார்கள் […]
Continue reading …பணிக்கு செல்லும் பெண்களுக்கு அ.தி.மு.க அரசின் திட்டமான அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துஉள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க அரசு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் சட்ட மன்ற தேர்தலில் வென்ற அக்கட்சியின் முதல்வர் தனது முதல் கையெழுத்தை இத்திட்டத்திற்காக போட்டார். ஆட்சிக்கு வந்த சிறிது நாட்களிலேயே இத்திட்டத்தை செயல்படுத்தவும் […]
Continue reading …