Home » Archives by category » சென்னை (Page 55)

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேல்முருகன் எம் எல் ஏ!

Comments Off on பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேல்முருகன் எம் எல் ஏ!

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி  ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது.  ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட […]

Continue reading …

வழிபாட்டு தளங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கத்தினர் நன்றி!

Comments Off on வழிபாட்டு தளங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கத்தினர் நன்றி!

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் உரிய நெறிமுறைகளுடன் திறக்கக்கோரி தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சங்கத்தினர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையில் கூறப்பட்டிருந்த விபரமாவது. கொரானா குறைந்தும் நாகப்பட்டினம் மாவட்டம் வகைப்பாட்டில் மூன்றாம் நிலையில் நிலவுவதால் இங்கு வழிபாட்டு தலங்கள் திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து இருப்பதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரானா தொற்று குறைந்து […]

Continue reading …

எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது !

Comments Off on எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது !

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது. மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக […]

Continue reading …

மேக்கேதாட்டு அணையைத் தடுக்க விரைந்து செயல்படு – பெ. மணியரசன்!

Comments Off on மேக்கேதாட்டு அணையைத் தடுக்க விரைந்து செயல்படு – பெ. மணியரசன்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டிட, கட்டுமானப் பொருட்களை அங்கே குவித்துள்ளது என்ற செய்தி, ஏடுகளில் வந்ததைப் பார்த்து, அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அணை கட்டும் முயற்சிக்கு அண்மையில் தடை விதித்தது. அத்துடன், மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணைகட்டும் ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று அறிந்து அறிக்கை அளிக்க ஆய்வுக் குழுவையும் அமைத்தது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், கர்நாடக அரசு […]

Continue reading …

மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் – மருத்துவர் இராமதாசு !

Comments Off on மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் – மருத்துவர் இராமதாசு !

தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் […]

Continue reading …

மறுபடியும் கேட்கிறேன்… மதுக்கடைகளை திறக்காதீர்… நிரந்தரமாக மூடுங்கள் – மருத்துவர் இராமதாசு!

Comments Off on மறுபடியும் கேட்கிறேன்… மதுக்கடைகளை திறக்காதீர்… நிரந்தரமாக மூடுங்கள் – மருத்துவர் இராமதாசு!

தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தண்ணீரை ஊற்ற வேண்டிய தமிழக அரசு, பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை அணைக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சமூகப் பொறுப்பும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாமல் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்திருப்பதை இப்படித் தான் வர்ணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் நாளை காலையுடன் முடிவடையவிருக்கும் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டித்து 11&ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் […]

Continue reading …

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!

Comments Off on தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் எழுதிய ‘இசையின் இசை’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று (12.06.2021) சனிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. சமூக முன்னேற்ற சங்க பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய இசையின் இசை நூலை புகழ்பெற்ற பாடகர் மருத்துவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் வெளியிட்டார். மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதல்படியை பெற்றுக் கொண்டார். பொங்குதமிழ்ப் பண்ணிசை […]

Continue reading …

கிடுகிடு! ஓராண்டை கடந்தும் மிரட்டும் கொரோனா.. 2ம் அலைக்கு வாய்ப்பு அதிகம் சென்னைக்கு கடும் எச்சரிக்கை!

Comments Off on கிடுகிடு! ஓராண்டை கடந்தும் மிரட்டும் கொரோனா.. 2ம் அலைக்கு வாய்ப்பு அதிகம் சென்னைக்கு கடும் எச்சரிக்கை!

கிடுகிடு! ஓராண்டை கடந்தும் மிரட்டும் கொரோனா.. 2ம் அலைக்கு வாய்ப்பு அதிகம் சென்னைக்கு கடும் எச்சரிக்கை! சென்னையில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னையில், 1,857 பேர் சிகிச்சை பெறுகின்றனர். பொதுமக்களின் தொடர் அலட்சியம், மாநகராட்சி சுகாதாரத்துறையின் சுணக்கம் போன்றவற்றால், சென்னையில், கொரோனா இரண்டாம் அலைக்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளதாக, சுகாதார துறை எச்சரித்துள்ளது. சீனாவின், வூஹான் நகரில் பரவ துவங்கிய கொரோனா பாதிப்பு, உலகின் பல்வேறு […]

Continue reading …

தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு அமல் எப்படி?

Comments Off on தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு அமல் எப்படி?

தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு அமல் எப்படி? சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இரண்டு படிப்புகளுக்கான மாணவ சேர்க்கையில் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள முற்பட்டோருக்கான 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள முற்பட்டவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன், மத்திய அரசு நிறைவேற்றியது. இருப்பினும், இந்த இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற மாட்டோம் […]

Continue reading …

தமிழகத்தில் 5இடங்களில் புதிய தொழில் பூங்கா :ரூ 1500கோடியில் பணிகள் தீவிரம்

Comments Off on தமிழகத்தில் 5இடங்களில் புதிய தொழில் பூங்கா :ரூ 1500கோடியில் பணிகள் தீவிரம்

சென்னை புறநகரில் உள்ள மணலூரில் ஒரு பிரத்தியேக இ-வாகன பூங்காவையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் நான்கு தொழில்துறை பூங்காக்களையும் உருவாக்கத் தமிழ்நாட்டின் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) தயாராக உள்ளது. 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் ரூ.1,536 கோடி செலவில் திருவள்ளூர் மாவட்டத்தின் மணலூரில் தொழில்துறை பூங்காக்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் வல்லம் வடகல் (கட்டம் -2) மற்றும் ஓரகதம் (கட்டம் -2), திருச்சியில் மணப்பாறை மற்றும் திண்டிவனம் வில்லுபுரத்திலும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ‘நாங்கள் தேவையான குடிமை […]

Continue reading …