சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஒரு தலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்த அஸ்விணி, கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அஸ்வினி அளித்த அடிப்படையில் அழகேசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஜாமினில் வெளிவந்த அழகேசன், […]
Continue reading …திடீரென சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து இருபத்தி இரண்டு மணி நேரம் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை செய்து வந்தனர். அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்றுக்கு தகவல் வந்தது. அச்செய்தி சேனல் தரப்பிலிருந்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை செய்தனர். […]
Continue reading …நாளை நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பாதுகாப்புடன் 875 வழித்தடங்களில் வினாத்தாள்கள் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். 7.72 லட்சம் பேர் +2 பொதுத்தேர்வை நாளை எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Continue reading …பரந்தூர் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதற்காக பரந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்த அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய விமான நிலையம் அமைக்க, நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த வருடம் […]
Continue reading …சென்னையில் உள்ள அனைவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது 6000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பலருக்கு 6 ஆயிரம் ரூபாய் சென்று சேரவில்லை என சென்னை மக்கள் புலம்பி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஏராளமானோர் தங்களது உடைமைகளை இழந்தனர். இதையடுத்து வெள்ள நிவாரணமாக சென்னையில் உள்ள […]
Continue reading …சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் மெட்ரோ பணிகள் காரணமாக பரங்கிமலை பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று முதல் ஒரு வார காலத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் பரங்கிமலை பகுதியில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி […]
Continue reading …சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரது நீதிமன்ற […]
Continue reading …இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருச்சி செல்லப் போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகளில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் ஆத்திரமடைந்து பயணிகள் புகார் அளித்து, பேருந்துகளை சிறைப்பிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, “நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து […]
Continue reading …சென்னை காவல்துறை சென்னையிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்குகளை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளியிலிருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர […]
Continue reading …திமுகவினர் கிளாம்பாக்கம் மக்களுக்கு அல்வா கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுகவினர் மத்திய அரசு அளிக்கும் நிதி பகிர்வு மிகவும் குறைந்ததாக இருக்கிறது. தமிழகத்திலிருந்து அளிக்கும் வருமானத்தில் பெருமளவு மத்திய அரசு எடுத்துக் கொண்டு சிறிய அளவே நம் மாநிலத்திற்கு தந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநில அரசை வஞ்சிக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, ஆ ராசா நாடாளுமன்றத்தில் பேசினர். மத்திய அரசு அளிக்கும் நிதி […]
Continue reading …