Home » Archives by category » சென்னை (Page 10)

வெடிகுண்டு மிரட்டல் வழக்கு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

Comments Off on வெடிகுண்டு மிரட்டல் வழக்கு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

சென்னை காவல்துறை சென்னையிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்குகளை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளியிலிருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர […]

Continue reading …

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் கொடுத்த அல்வா!

Comments Off on கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் கொடுத்த அல்வா!

திமுகவினர் கிளாம்பாக்கம் மக்களுக்கு அல்வா கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுகவினர் மத்திய அரசு அளிக்கும் நிதி பகிர்வு மிகவும் குறைந்ததாக இருக்கிறது. தமிழகத்திலிருந்து அளிக்கும் வருமானத்தில் பெருமளவு மத்திய அரசு எடுத்துக் கொண்டு சிறிய அளவே நம் மாநிலத்திற்கு தந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநில அரசை வஞ்சிக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, ஆ ராசா நாடாளுமன்றத்தில் பேசினர். மத்திய அரசு அளிக்கும் நிதி […]

Continue reading …

சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்று காலையில் சென்னையிலுள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும், பள்ளிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள 5 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, குறிப்பிட்ட பள்ளிகளிலிருந்து தங்கள் பிள்ளைகளை […]

Continue reading …

கூலித்தொழிலாளர்கள் மெட்ரோவில் பயணிக்க தடையா?

Comments Off on கூலித்தொழிலாளர்கள் மெட்ரோவில் பயணிக்க தடையா?

சமூக வலைதளங்களில் சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் பயணம் செய்ய வந்தபோது அவர்கள் தடுக்கப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்தது. இன்று காலை சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வேலைக்கான பொருட்களுடன் மெட்ரோ ரயில் பயணம் செய்ய வந்த போது அவர்கள் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இச்செய்தியை அடுத்து மெட்ரோ நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]

Continue reading …

அரசு பேருந்தில் ஓட்டை! உயிர் தப்பிய பயணி!

Comments Off on அரசு பேருந்தில் ஓட்டை! உயிர் தப்பிய பயணி!

அரசு பேருந்து சென்னை, அமைந்தகரை அருகே சென்றுக்கொண்டிருந்த போது, பேருந்தில் பலகை உடைந்து பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அந்த பயணி உயிர் தப்பினார். திருவேற்காடு செல்லும் பெண்களுக்கான கட்டணமில்லா அரசு பேருந்து ஒன்று சென்னை அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் இருந்த ஓட்டையை பலகை வைத்து மூடியுள்ளனர். அப்பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், பலகை உடைந்து அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். அப்போது அந்த […]

Continue reading …

சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளி கைது!

Comments Off on சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளி கைது!

இன்று திருவான்மியூர் பகுதியில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த யோவான் ஆண்டவர் என்பவரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் சாக்லெட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிககள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாகக் கூறி, 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முக்கிய குற்றாவாளி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அடையாறு பகுதியைச் சேர்ந்த […]

Continue reading …

கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

Comments Off on கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகம்- என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு, பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது? கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு […]

Continue reading …

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை?

Comments Off on சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை?

என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினார் இந்த பகுதிகளில் ஊடுருவு இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இந்த சோதனையை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது […]

Continue reading …

ஐஆர்சிடிசி இணையதளத்தில் பண மோசடி?

Comments Off on ஐஆர்சிடிசி இணையதளத்தில் பண மோசடி?

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் கணக்கிலிருந்து ரூ.1.8 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பல ஆயிரக்கணக்கான ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் ஐஆர்சிடிசி தளத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். பின்னர் அதை ரத்து செய்து ரீஃபண்ட் பெறுவதற்காக ஐஆர்சிடிசியின் இணையதளம் சென்றுள்ளார். அதில் உதவிக்கு என்று பதிவிடப்பட்டிருந்த […]

Continue reading …

தமிழில் பேசிய மாணவனை தாக்கிய ஆசிரியை !

Comments Off on தமிழில் பேசிய மாணவனை தாக்கிய ஆசிரியை !

மாணவர் ஒருவர் தமிழில் பேசியதால் ஆசிரியை மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை நாயகி என்பவர், அவ்வகுப்பைச் சேர்ந்த மாணவன் தமிழில் பேசியதால் ஆத்திரமடைந்து அவரது காதைப் பிடித்துத் திரிகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவனை தாக்கியதாக தனியார் பள்ளி […]

Continue reading …