Home » Archives by category » தமிழகம் (Page 167)

ஆர்.கே.சுரேஷ் மீதான வழக்குக்கு 2 வாரம் அவகாசம்

Comments Off on ஆர்.கே.சுரேஷ் மீதான வழக்குக்கு 2 வாரம் அவகாசம்

ஆரூத்ரா கோல்டு நிறுவனம் ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்ததுடன், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்குத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. […]

Continue reading …

போக்குவரத்துத்துறை அசத்தல் அறிவிப்பு!

Comments Off on போக்குவரத்துத்துறை அசத்தல் அறிவிப்பு!

தொலைதூர பேருந்துகளில் முன்பதிவு செய்யும் சேவையில் விரிவாக்கம் செய்து புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பல பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த பேருந்துகளில் பயணிக்க ஒரு மாதத்திற்கு முன்பே இருக்கைகளை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும். அதேபோல தற்போது தமிழக மாவட்டங்களுக்குள் 200 கி.மீ தொலைவிற்கு பயணிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து […]

Continue reading …

ஏஒன் தாழில்நுட்பத்தால் 4000 பேர் வேலை இழப்பு!

Comments Off on ஏஒன் தாழில்நுட்பத்தால் 4000 பேர் வேலை இழப்பு!

ஏஒன் தொழில்நுட்பம் மற்ற தொழில் நுட்பத்தை விடவும் உலகளவில் மிக அதிகமாக வளர்ந்து வருகிறது. இரண்டே மாதங்களில் இந்த தொழில்நுட்பத்தை 100 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த மே மாதம் உலகம் முழுவதும் சுமார் 30,000 பேர் வேலை இழந்த நிலையில் அதில் 4000 பேர் ஏஒன் தொழில்நுட்பத்தால் மட்டுமே வேலை இழந்தனர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏஒன் என்ற செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் இன்னும் அதிகமான வேலை […]

Continue reading …

ஆவின் பால் நிறுவனத்தில் 2500 லிட்டர் பால் மோசடி!

Comments Off on ஆவின் பால் நிறுவனத்தில் 2500 லிட்டர் பால் மோசடி!

ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கி தினமும் 2500 லிட்டர் பால் மோசடி வேலூர் ஆவின் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலூரில் பால் திருட்டு கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரபடுத்திய நிலையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூதனமான முறையில் மோசடி செய்ததன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் திருடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஒரே பதிவு எண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அந்த […]

Continue reading …

இரும்பை தலையில் வைத்து சிகிச்சையளித்த மருத்துவர்!

Comments Off on இரும்பை தலையில் வைத்து சிகிச்சையளித்த மருத்துவர்!

லாரி டிரைவர் ஒருவருக்கு விபத்தில் சிக்கியபோது தலையில் தையல் போட்ட மருத்துவர் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து சிகிச்சையளித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் என்பவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் தையல் போட்ட நிலையில் ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. இதையடுத்து உறவினர்கள் கார்த்திகேயனை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து […]

Continue reading …

சார்ஜிங் பாய்ண்ட் 100 இடங்களில் அமைக்க திட்டம்!

Comments Off on சார்ஜிங் பாய்ண்ட் 100 இடங்களில் அமைக்க திட்டம்!

தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள 100 இடங்களில் இ&-வாகனங்களுக்கு மின்சார சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுதும் எலக்ட்ரிக் வாகனங்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சார்ஜிங் பாயிண்ட் நிலையங்களும் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில் தனியார் பலர் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை வைத்திருக்கிறது. தமிழகம் மின்வாரியமே தற்போது சார்ஜிங் நிலையங்களை வைக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய மின்சார […]

Continue reading …

சென்னை – இலங்கை இடையே சொகுசுக் கப்பல்!

Comments Off on சென்னை – இலங்கை இடையே சொகுசுக் கப்பல்!

ஏற்கனவே சென்னை மற்றும் இலங்கைக்கு இடையே பயணிகள் சொகுசு கப்பல் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் சொகுசு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எம் பி எம்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த பயணிகள் சொகுசு கப்பலை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சென்னையில் தொடங்கி […]

Continue reading …

விவசாயிகளிடம் நிலங்களை ஒப்படைக்க டிடிவி கோரிக்கை!

Comments Off on விவசாயிகளிடம் நிலங்களை ஒப்படைக்க டிடிவி கோரிக்கை!

டிடிவி தினகரன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கை வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாவது சிப்காட் அமைக்க சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தங்களது வாழ்வாதாரத்தின் ஆதாரமாக விளங்கும் விவசாய நிலங்கள் பறிபோன கவலையில் உண்ணாவிரதம் இருந்த […]

Continue reading …

மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவா?

Comments Off on மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவா?

ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நுகர்வோர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் மின் கட்டண உயர்வு மட்டுமே ஒரே வழி என்று கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி உள்ள அனுமதியின்படி அடுத்த மாதம் முதல் மின் கட்டண உயர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை மாதம் 18ம் தேதி மின்சார […]

Continue reading …

ஜூலை முதல் மின்கட்டண உயர்வா?

Comments Off on ஜூலை முதல் மின்கட்டண உயர்வா?

ஜூலை மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2026 – 27ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவாக இருந்து வரும் நிலையில் இந்த முடிவிலிருந்து விலக்கு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மின்சார கட்டணத்தை ஜூலை […]

Continue reading …