
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை கடுமையானது; அளவுக்கு அதிகமானது; தேவையற்றது ஆகும். தமிழ்நாட்டின் 3 அரசு மருத்துவக் […]
Continue reading …
சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு ஜப்பான் சென்றுள்ளார் தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு ரஜினி ரசிகர்கள் வரவேற்பளித்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணம் செய்து உள்ளார். அவர் இந்த இரு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலில் செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறார். இன்று காலை ஜப்பான் சென்ற தமிழக முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை […]
Continue reading …
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறித்து கரூர் எஸ்பி விளக்கமளித்துள்ளார். இன்று காலை முதல் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை செய்ய வருமானவரித்துறையினர் சென்றபோது திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி, “கரூர் […]
Continue reading …
பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்படும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வரும் ஜூன் மாதம் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதியும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, “தமிழகத்திலுள்ள 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள […]
Continue reading …
ஆ.ராசா, “கருணாநிதியால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி ஆனார். இல்லையென்றால் இன்னும் அவர் ஆடுதான் மேய்த்துக் கொண்டிருப்பார்” என்று அவர் பேசியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். விழா ஒன்றில் பேசிய ஆ.ராசா, “கலைஞரின் பேனாவால் போடப்பட்ட கையெழுத்தால்தான் அண்ணாமலை ஐபிஎஸ் ஆனார்” என்று பேசினார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “என் பேனா, என் மை, என் பெற்றோர், நண்பர்கள் மற்றும் எனது ஆசிரியர்கள் அளித்த ஆதரவு. என்னைப்போல் பலர், அடுத்த கட்டத்திற்கு […]
Continue reading …
தற்போது மீண்டும் கரூரில் ருமானவரித்துறை சோதனை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை முதல் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை கோவை கரூர் ஆகிய பகுதிகளில் இச்சோதனை நடைபெற்று வரும் வகையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை நடந்த போது திமுக தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வருமானவரி சோதனைக்கு வந்த அதிகாரி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. […]
Continue reading …
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன என கூறியுள்ளார். சென்னையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டுகின்றது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை, தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே ரெய்டு நடத்தப்படுகிறது” பதிலளித்தார்.
Continue reading …
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மே 29ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராயம் விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பேரணியாகச் சென்று கவர்னரை சந்தித்து மனு அளித்தார். அடுத்த கட்டமாக தமிழகம் முழுதும் மே29ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கள்ளச்சாராய உயிர் இழப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து இந்த […]
Continue reading …
ஆவின் பால் நிறுவனம் தமிழகத்தில் அமுல் நிறுவனம் கால் பதிப்பது பற்றிய விளக்கமளித்துள்ளது. ஆவின் பால் நிறுவனம் பால் பொருட்கள் விற்பனையில் முன்னணியாக உள்ளது. இதுதவிர தனியார் துறையைச் சேர்ந்த பால் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனம் வெளிமாநிலங்களிலும் கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆவின் கொடுப்பதைவிட லிட்டருக்கு ரூ.2 அதிகம் கொடுப்பதாகக் கூறி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள […]
Continue reading …
மகா சுசீந்திரன் மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர் மாவட்ட பாஜக 18 நிர்வாகிகள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. பதவி கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு சிலர் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். மதுரை பாஜக பெண் கவுன்சிலர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் தனக்கு விரும்பிய பதவி கிடைக்காததால் […]
Continue reading …