Home » Archives by category » தமிழகம் (Page 178)

முதலமைச்சருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

Comments Off on முதலமைச்சருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சரின் குடும்பத்தினர் முப்பதாயிரம் கோடி ரூபாய் பணம் சேர்த்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிஆர் ஆடியோ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து இரண்டாவது ஆடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோக்களுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனை […]

Continue reading …

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

Comments Off on ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்ஜிஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும் கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியில் இருந்து நியதிக்கு புறம்பாக நீக்கியும் கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் தான் என்ற விதியை மாற்றி அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் வரமுடியும் என்ற அடிப்படை விதியை மாற்றியதற்காகவும் எடப்பாடி […]

Continue reading …

பிரபல நடிகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Comments Off on பிரபல நடிகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

துபாய்க்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தனியார் நிதி நிறுவனமான ஆரூத்ரா கோல்டு நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து, இந்த […]

Continue reading …

கோவையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மயக்கம்!

Comments Off on கோவையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மயக்கம்!

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பெரரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே ஆசிரியர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து 16 மாணவர்கள் வீடு திரும்பினர். 8 மாணவ, மாணவிகள் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]

Continue reading …

கமலஹாசன் பற்றி வானதி சீனிவாசனின் கருத்து!

Comments Off on கமலஹாசன் பற்றி வானதி சீனிவாசனின் கருத்து!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன் என்று கூறியுள்ளார். வரும் 10ம் தேதி கர்நாடக மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று அவர் கர்நாடகம் சென்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு திரட்ட பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் குறித்து வானதி சீனிவாசன் கூறிய போது ஊழல் கரைப்படிந்த […]

Continue reading …

அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!

Comments Off on அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்பி கனிமொழி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பிலிருந்தும் உதயநிதி மற்றும் டி.ஆர்.பாலு தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ்க்கு பதிலளித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது […]

Continue reading …

மதுரை-கோவை ரயில்வே சேவையில் மாற்றம்!

Comments Off on மதுரை-கோவை ரயில்வே சேவையில் மாற்றம்!

தெற்கு ரயில்வே மதுரை கோவை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ரயில்வே கோட்டத்தில் போத்தனூர் ரயில் நிலைய பாலத்தில் இரும்பு கர்டர்களை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. எனவே ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதியம் 12.15 மணிக்கு கோவை சென்றடையும் மதுரை – கோவை ரயில் இந்த இரண்டு நாட்களும் மதுரையிலிருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் […]

Continue reading …

கணினி சான்றிதழ் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டாயம்!

Comments Off on கணினி சான்றிதழ் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டாயம்!

இனி கட்டாயம் கணினி சான்றிதழ் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 உள்ளிட்ட தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கணினி சான்றிதழ் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அது குறித்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. கணினி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நிரந்தரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சான்றிதழ் படிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் அரசு நடத்துகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி, நீதிமன்றம் […]

Continue reading …

அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

Comments Off on அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

இந்திய ரிசர்வ் வங்கி அதிகமாக கடன் வாங்கும் மாநிலங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில் அதில் தமிழகம் முதல் இடத்திலும் தமிழகத்தை அடுத்து ஆந்திரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களும் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. […]

Continue reading …

அண்ணா பல்கலை அறிவிப்பு!

Comments Off on அண்ணா பல்கலை அறிவிப்பு!

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர்கள் முதலாமாண்டு தேர்வுகளை எழுதினர். அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். இத்தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முனைவர் படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளதாக […]

Continue reading …