
வைரத்தின் மேல் பெரும்பாலும் அனைவருக்குமே மோகம் அதிகமாகவே உள்ளது. வைரத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து கொள்வது வழக்கமாக இருந்தாலும் வைரம் பதிக்கப்பட்ட பற்களை நாம் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறதா? குஜராத் மாநில சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள் தங்கம், வைரம் பதிக்கப்பட்ட பற்களை தயாரித்து வருகின்றனர். பற்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாடையையுமே அவர்கள் தத்ரூபமாக செய்து அசத்துகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரம் பதிக்கப்பட்ட பற்களை பொருத்திக்கொள்வது […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் வேலுமணி திமுக ஆட்சியை எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மட்டும் இன்றி திமுகவினரே விரும்பவில்லை என கூறியுள்ளார். அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியை திமுக கட்சியினரே விரும்பவில்லை. கோவையில் கஞ்சா பழக்கம் அதிகரித்துவிட்டது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. கோவையில் மட்டும் 1250 கிலோ கஞ்சா […]
Continue reading …
ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது. அடுத்த கட்டமாக பிரபல ஹெச்பிஓ கண்டெண்டுகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபலமான ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இதுநாள் வரை ஐபிஎல் கிரிக்கெட்டை ஆன்லைனில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்தது. இவ்வாண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா ஓடிடி பெற்றது. ஐபிஎல்லை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பி வந்தது. கோடிக்கணக்கானோர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஐபிஎல் முடிவடைவதற்குள் மேலும் பல வீடியோ கண்டெண்டுகளை அதிகரிக்க […]
Continue reading …
ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெற்றனர். கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் […]
Continue reading …
வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 13 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 13 தொகுதிகள் வேண்டும் என அமித்ஷா கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் […]
Continue reading …
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காவலர்களுக்கு வழங்கப்படும் சீருடைப்படி ஆண்டுக்கு ரூ.4500 என்று அறிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்பில், ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கு உணவுப்படியாக ரூபாய் 300 வழங்கப்படும். காவலர்களுக்கு எரிபொருள் படி 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 370லிருந்து 515ஆக உயர்த்தி வழங்கப்படும். சென்னை புறநகரில் புதிதாக மூன்று பெருநகர காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். காவல்துறையல் சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் உருவாக்கப்படும். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் காவலர்களுக்கு மகளிர் விடுதி கட்டி தரப்படும். பெண் குழந்தைகள் […]
Continue reading …
கோவையில் கடைக்காரர் ஒருவர் சிக்கன் மற்றும் மட்டன் வாங்க பணம் இல்லையா? தவணை முறையில் வாங்கிக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டு உபயோகப் பொருட்களை தவணை முறையில் வாங்குவது போல் சிக்கன், மட்டன்களையும் தவணை முறையில் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். வீட்டு விசேஷங்களுக்கு 5000 ரூபாய்க்கு மேல் இறைச்சி வாங்கும் பொது மக்களுக்கு […]
Continue reading …
இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் ஒரே பேரூராட்சி தலைவர் மா.சேகர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளளார். இன்ற காலை அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார். அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். அமமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மா.சேகர் சற்றுமுன் எடப்பாடி […]
Continue reading …
ரயில்வே துறை பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் இயங்கி கொண்டிருக்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தூத்துக்குடியலிருந்து சேலம், தர்மபுரி வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விட்டது. கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டதை அடுத்து ரயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக பெங்களூரு ஓசூர், தர்மபுரி சேலம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் […]
Continue reading …