
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் டிஸ்க்ரினரி பண்டு தொகை ரூ.2 கோடி குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஆளுநர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கூறிய போது டிஸ்க்ரினரி என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி […]
Continue reading …
மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதிமுக வேட்பாளர் கர்நாடக மாநிலத்திலுள்ள புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி நிறுத்திய புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்த […]
Continue reading …
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட பாலம் தஞ்சையில் திடீரென இன்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் கட்டுமான பணிகள் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளின் தரம் குறைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றன. இது குறித்த வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தஞ்சை மாநகராட்சி 27வது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பத்து நாட்களில் வடிகால் வாய்க்கால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. 3 யூனிட் மணல் ஏற்றி சென்ற லாரியின் […]
Continue reading …
கொடைக்கானலுக்கு அதிகமாக வரும் சுற்றுலா பயணிகளுக்காக மதுரை முதல் கொடைக்கானல் வரை சிறப்பு ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஏசி பேருந்துகள் மதுரை ஆரப்பாளையம் முதல் கொடைக்கானல் வரை செல்லும். இந்த பேருந்துகளில் கட்டணம் ரூபாய் 150 வசூலிக்கப்படும் எனும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4:45 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பும் இந்த பேருந்து 8.30 மணி அளவில் கொடைக்கானல் செல்லும் என்றும் அதேபோல் காலை 9:30 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 […]
Continue reading …
குளிர்பானத்தில் விஷம் கலந்து தாத்தா, பாட்டியை கொலை செய்துள்ளார் பேரன். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் அருகிலுள்ள பில்லூரைச் சேர்ந்தவர் கலுவு என்ற ஆறுமுகம். இவரது மனைவி மணி. இந்த தம்பதியர்க்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் முருகன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள காடாம்புலியூரில் வசிக்கிறார். முருகனின் மகன் அரருள்சக்தி (19) நேற்று மாலை பில்லூர் கிராமத்திற்கு […]
Continue reading …
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது அவரது செயல்பாடுகளில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோர்களின் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலையிட்டு மரியாதை செய்தது அரசியலுக்கான ஆரம்பமாக கூறப்படுகிறது. விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் சீமான், ‘விஜய் அரசியலுக்கு வரட்டும் வருவது நல்லதுதான். அவரது அரசியல் வருகையை […]
Continue reading …
காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பிச்சைக்காரரை அடித்து அவரிடமிருந்து 20 ஆயிரத்தை பணத்தை அபகரித்து சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் 8 ஆண்டுகளாக ராமன் ஜி என்பவர் பிச்சையெடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் அதில் கிடைக்கும் வருமானத்தில் வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவு போக சேமித்து வைத்துள்ளார். மது போதையில் மூன்று வாலிபர்கள் அவருடைய வீட்டிற்குள் நுழைந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி 20 ஆயிரம் பணத்தை அபகரித்து […]
Continue reading …
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியிருந்த வீட்டை காலி செய்த பிறகு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கேட்டவரை வீட்டின் உரிமையாளர் கொலை செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலருகே 60 வயது முதியோர் ஒருவர் சமீபத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்தார். அவருடைய மகளுக்கு மகேந்திர சிட்டியில் வேலை கிடைத்ததால் இந்த வீட்டை அவர் வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. குடியிருந்த வீட்டில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகள் இல்லை என்பதால் அவர் 28 நாட்களில் வீட்டை காலி செய்வதாகவும் தான் […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக அடக்கி வாசிப்பது நல்லது என்று கூறியிருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும், அதிமுகவும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இரு கட்சியின் தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பாஜக மேலிடத்தில் உள்ளவர்கள் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று கூறியுள்ளனர், எடப்பாடி பழனிச்சாமி கூட அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது என்றும் கூறியுள்ளார். […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இனி வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. வரும் 20, 21, 22ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசி வருகிறது. பல ஊர்களில் வெப்பநிலை 40 டிகிரி […]
Continue reading …