Home » Archives by category » Uncategory (Page 14)

இன்று முதல் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம்

Comments Off on இன்று முதல் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம்

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.முதலில் 120 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பயணிகள் நலனை […]

Continue reading …

பிரபல நடிகருக்கு வில்லனாக மாறும் ஜெய்!!!

Comments Off on பிரபல நடிகருக்கு வில்லனாக மாறும் ஜெய்!!!

பிரபல நடிகருக்கு வில்லனாக மாறும் ஜெய்!!! ஒரு சைடில் இருந்து பார்த்தால் தளபதி விஜய் போலவே இருக்கும் ஜெய், பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் ஜெய்யை தேடி வந்தனர். ஆனால் அதை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டாரா என்றால் கேள்விக்குறிதான். பத்தாததற்க்கு குடியும் கூத்துமாக […]

Continue reading …

மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது…மத்திய படைகளை உடனே அனுப்புமாறு கோரிக்கை

Comments Off on மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது…மத்திய படைகளை உடனே அனுப்புமாறு கோரிக்கை

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து விட்டது’ எனவும் மத்திய படைகளை உடனே மேற்கு வங்கத்திற்கு அனுப்புமாறு தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து விட்டதால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே அங்கு மத்திய படைகளை அனுப்புமாறு மாநில பாஜக தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில்,காஷ்மீரை விடவும் மேற்கு வங்கத்தில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை […]

Continue reading …

முதல்வர் குறித்து இனி விமர்சிக்க கூடாது…ஸ்டாலினை எச்சரித்த உயர்நீதிமன்றம்

Comments Off on முதல்வர் குறித்து இனி விமர்சிக்க கூடாது…ஸ்டாலினை எச்சரித்த உயர்நீதிமன்றம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்க கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையாக விமர்சிப்பதை ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை. தமிழக முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதையும் மு.க ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் ஆதாயத்திற்கான தலைவர்கள் கடுமையான வார்த்தைகளை பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. கருத்து சுதந்திரம் என்று தலைவர்கள் தவறான வார்த்தைகளை பேசுவது […]

Continue reading …

பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்றுவதில் புதிய சிக்கல்…

Comments Off on பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்றுவதில் புதிய சிக்கல்…

பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டமன்ற மேலவையில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவசரச் சட்டம் கொண்டு வர கர்நாடக அரசு தீர்மானித்துள்ளதாக தலவல்கள் வந்துள்ளது. இந்த மசோதாவானது கடந்த புதன்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேலவையில், எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து அந்த சட்டத்தை தோற்கடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் மசோதாவை மேலவையில் நேற்று தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் தலைவரான பிரதாப்சந்திர ஷெட்டி, அவையை வியாழன் மாலையே ஒத்தி வைத்து அறிவித்தார். […]

Continue reading …

அரையாண்டு தேர்வுகள் நடக்குமா…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Comments Off on அரையாண்டு தேர்வுகள் நடக்குமா…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் இணையவழியாக அரையாண்டு தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடச்சூர், அயலூர், கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் பணிகளைப் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தனியார் பள்ளிகள் விரும்பினால் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வை இணையவழியில் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். 50 விழுக்காடு பாடங்களைக் குறைப்பதுடன், எந்தெந்தப் […]

Continue reading …

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கலக்கம்!!

Comments Off on புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கலக்கம்!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமாக இருந்த ஜான்குமார் எம்எல்ஏ, சாதகமற்ற சூழல் நிலவினால் காங்கிரஸிலிருந்து விலகுவேன் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இச்சூழலில் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில காங்கிரஸ் தலைவர் கோரியுள்ளார். திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த ஜான்குமார் பாஜகவுக்கு மாறப்போவதாகத் தகவல் வெளியானது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு ஜான்குமார் வென்றார். அப்போது, தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். இதனால் அவர் போட்டியிட தனது பதவியை […]

Continue reading …

அண்ணனை மிஞ்சிய சகோதரி மீண்டும் வடகொரியா…!

Comments Off on அண்ணனை மிஞ்சிய சகோதரி மீண்டும் வடகொரியா…!

கிம் ஜாங்-உனின் சகோதரி கிம் யோ-ஜாங் புதன்கிழமை தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங்-வா-விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். காரணம் வேறொன்றுமில்லை. வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என கூறி வருகிறது. அது குறித்து தென்கொரொயா சந்தேகம் எழுப்பியுள்ளது. தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங்-வா சென்ற வார இறுதியில், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலே இல்லை என்ற வட கொரியாவின் கூற்றை நம்புவது கடினம் என்று கூறினார். தொற்றுநோயை […]

Continue reading …

சீன உய்குர் முஸ்லிம்களுக்கு இந்த நிலைமையா

Comments Off on சீன உய்குர் முஸ்லிம்களுக்கு இந்த நிலைமையா

சீன கம்யூனிச அரசு, உய்குர் இன முஸ்லீம்களை, சிறைவைப்பதிலும், அவர்கள் மீது பயங்கரவாத முத்திரையை குத்துவதும், மிகப்பெரிய அளவில், நவீன திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் உய்குர் முஸ்லீம்களை, தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்தும், பிரிவினைவாதிகள் என அடையாளப்படுத்தி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி […]

Continue reading …

சூரியனை விட 10 மடங்கு வெப்பமான சீனா உருவாக்கிய சூரியன்…

Comments Off on சூரியனை விட 10 மடங்கு வெப்பமான சீனா உருவாக்கிய சூரியன்…

சீனாவின் செங்குடு நகரில் செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக சீனா கையில் எடுத்த ‘செயற்கை சூரியன்’ என்று அழைக்கப்பட்ட ’அணுக்கரு இணைவு உலை’யை வெற்றிகரமாக ’சுவிட்ஸ் ஆன்’ செய்து அதை இயக்கியுள்ளது. இந்த செயற்கை சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் சூரியனை விடவும் 10 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள அணு உலைகளில் அணுக்கரு பிளவு வினை மூலம் தான் ஆற்றல் பெறப்படுகிறது. அணு உலைகளில், யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை நியூட்ரான் மூலம் […]

Continue reading …