பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Filed under: தமிழகம் |

தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், போன்றோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது தமிழக பா.ஜ.க மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் லோக்சபா எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/CPRBJP/status/1306080688949456898

அவருடைய ட்விட்டர் பதிவில்; நான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததன் முடிவு இன்று காலை வந்தது. அதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். உங்களுடைய பிரார்த்தனைகள், ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களால் விரைவில் குணமடைவேன். எனக்காக செய்தி அனுப்பிய அனைவருக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்.