விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி

Filed under: தமிழகம் |

டெல்லியில் விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்.

ஏராளமானோர் பங்கேற்பு.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திருச்சி மாவட்டம் சார்பில் இன்றுதிருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகாமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி விவசாயி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில்
தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் அயிலை.சிவசூரியன், ஜனநாயக சமூக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஐ.டி.யு.சி. சுரேஷ்,மக்கள் கலை இலக்கிய கழகம் மாநில பொதுச் செயலாளர் கோவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் கே.சி. பாண்டியன் ,மக்கள் அதிகாரம் செயலாளர் செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.