இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி. இவருடைய மூத்த சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி. இவர் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் சினேகாஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்த தகவலை மேற்குவங்காள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பரிசோதனையில் சினேகாஷிஷ் மாமனாருக்கும் மற்றும் மாமியாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சவுரவ்வின் குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொரோனா பாதிக்கப்ட்டுள்ளனர்.
Related posts:
சானியா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது தந்தை!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் டொமினிக் தீம்!
இந்தியா- இலங்கை இறுதிப் போட்டியில் மைதானத்தில் பாட்டில் வீசிய ரசிகருக்கு 5 ஆண்டுகால தடை
பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா; பந்துவீசிய முகமது சமி - பியுஸ் சாவ்லா! இதோ வீடியோ!



