மகாத்மா காந்தியின் பிறந்தநாளுக்கும், லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளுக்கும் பிரதமர் மோடி மரியாதை!

Filed under: இந்தியா |

இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளும் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்தநாளும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதை குறித்து பிரதமர் பதிவிட்டது; மகாத்மா காந்தியை இந்த நாளில் வணங்குகிறோம். அவரின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்கள் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. வளமான மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் பாபுவின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றது.

https://twitter.com/narendramodi/status/1311843987532050437

இதை அடுத்து, லால் பகதூர் சாஸ்திரி ஜி தாழ்மையும் உறுதியும் கொண்டவார். அவர் எளிமையை சுருக்கமாகக் காட்டி, நமது தேசத்தின் நலனுக்காக வாழ்ந்து வந்தவர். அவர் இந்தியாவுக்காக செய்த எல்லாவற்றிற்கும் ஆழ்ந்த நன்றியுடன் அவரது ஜெயந்தியில் அவரை நினைவில் கொள்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி இந்த இரு பெரும் தலைவர்களின் நினைவை பதிவிட்டுள்ளார்.