வீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் – பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!

Filed under: தமிழகம் |

வீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அறிக்கையில், கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை , முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர்

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, நாளை காலை சரியாக 6.01 மணிக்கு, பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும் வேல் அல்லது முருகன் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்கு காட்டுவோம் மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்போம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.