PayPal நிறுவனம் 2500 ஊழியர்களை பணிநீக்கம்!

Filed under: இந்தியா,உலகம் |

பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. அந்த வரிசையில் ஆன்லைன் கட்டண நிறுவனமான PayPal பணி நீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் ஏராளமான நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்தது என்பதும் இதில் மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் இருந்தன. தற்போது மீண்டும் வருமானத்தை அதிகரிக்கவும் நஷ்டத்தை குறைக்கவும் ஒரு சில நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வகையில் உலகின் முன்னணி ஆன்லைன் கட்டண நுழைவாயில் நிறுவனங்களில் ஒன்றான PayPal நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதன்படி 2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கவும் நஷ்டத்தை தவிர்க்கவும் இந்த பணிநீக்கம் இன்றியமையாதது என PayPal நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ அலெக்ஸ் என்பவர் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பணிநீக்கம் செய்யப்படுவோருக்கு இந்த வார இறுதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. றிணீஹ்றிணீறீ நிறுவனத்தை அடுத்து இன்னும் சில நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.