நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியா? என்பது குறித்து தகவல் அளித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. ஆனால், அக்கட்சியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலுக்கும், பாஜக வானதி சீனிவாசனுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்த நிலையில் கமல் தோல்வியுற்றார். இந்நிலையில், கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் அரசு […]
Continue reading …இளைஞர் ஒருவர் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புகழ்பெற்ற ஈஷா யோகா மையம் கோயம்புத்தூரில் பிரம்மாண்ட சிலையுடன் உள்ளது. இங்கே ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக சிவராத்திரியன்று இங்கே மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வருகை தருவார்கள். இந்நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ரமணா என்ற 28 […]
Continue reading …ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்.7-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளதுஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்.7-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அக். 8, 9, 10, 12, 15 ஆகிய தினங்களில் சம்ஸ்கிரிதி மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் லிங்க பைரவி யூ- டியூப் சேனலில் மாலை 6.45 மணிக்கு நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படும். இதில் […]
Continue reading …ஜூலை 10 நதிகள் மீட்பு இயக்கத்தின் ஒரு அங்கமாக இயங்கும் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் மக்களின் பங்களிப்போடு நடப்பு நிதியாண்டில் (2020-2021) கர்நாடகாவில் 70 லட்சம், தமிழகத்தில் 40 லட்சம் என மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நதிகள் மீட்பு இயக்கத்தின் நிர்வாக குழுக் கூட்டம் ஆன்லைன் முறையில் நேற்று முன்தினம் (ஜூலை 8) நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் […]
Continue reading …கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அம்மன் அர்ஜுனனின் மகள் குடும்பத்தினரோடு மதுரை சென்று திரும்பி உள்ளனர். இதன் பின்னர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் எம்எல்ஏவின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏ மற்றும் மற்றவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் […]
Continue reading …கோவை, ஜூலை 3 தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு நீடிப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், என்று ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது நீண்ட காலம் ஆகலாம் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்திலுள்ள தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஊதியம் கொடுக்க முடியாமல் அந்தந்த பள்ளி நிர்வாகம் திக்குமுக்காடி கொண்டு […]
Continue reading …கோவை, ஜூன் 28 வீரபாண்டிய கட்டபொம்மனை வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுத்த எட்டப்பனை போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எங்கள் சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் திமோத்தி ரவீந்தர் என்று நம்மிடத்தில் மனக்குமுறலை கொட்டுகிறார்கள் டயோசீசனில் பணி புரியும் சில நேர்மையான ஆயர்கள். கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக இருந்து வந்த கருணாகரனை கொரோனா வைரஸ் தொற்று அத்துடன் தலைமை பேராயரின் அங்கீகார கடிதம் வரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி இன்று ஓய்வு பெறவிருந்த கருணாகரனை வருகிற 1/7/2020/ அன்று […]
Continue reading …கோவை, ஜூன் 27 கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக இருந்து வரும் கருணாகரன் என்பவர் வருகிற 28/ 6/ 2020/ அன்று ஓய்வு பெறுகிறார். இதை ஸ்மல் செய்த திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தின் ஆயர் வில்சன்குமாரின் தலைமையிலான ஒரு சில அட்டகத்தி ஆயர்களுடன் இந்த பவர்ஃபுல் போஸ்ட்டை தக்கவைக்க வில்சன் திருமண்டலத்தில் பல உள்ளடி வேலை செய்து வருகிறாராம்.கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் யாருக்கு.? அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும் […]
Continue reading …கோவை, ஜூன் 19 கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் இரவு நேர டிபன்கடை நடத்தி வருபவர் வேலுமயில். இவர், கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் தனது மகனுடன் இரவு எட்டு மணிக்கு மேல் தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்து வந்தார். அங்கு வந்த ரத்தினபுரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லமணி கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் கடையை திறக்க கூடாது உடனடியாகவே மூடும்படி கூறினார். அப்போது வேலுமயிலின் […]
Continue reading …ஜூன் 20 கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த நெருக்கடியான சமயத்தில் யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சத்குருவின் வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள். கடந்த சில மாதங்களாக உலகம் கொரோனா வைரஸ் என்ற மாபெரும் சவாலை எதிர்கொண்டு […]
Continue reading …