தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேர் பாதிப்பு, 65 பேர் பலியாகியுள்ளனர், 3,994 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் சென்னையில் 1,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,26,581 பேர் பாதிப்பு, 1,765 பேர் பலியாகியுள்ளனர், 78,161 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 73,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,169 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை, ஜூலை 03 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம், அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கும் காரணத்தால் இந்தியாவில் தொற்று குறைவாக உள்ளது. ஆகவே மக்கள் கூடுகின்ற பொது இடங்கள் அனைத்திலும் அரசு கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். சேனிடைசர் பயன்படுத்துவது எதிர்பார்த்த பலனை தராது. பொதுமக்கள் […]
Continue reading …திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோயில் உள்ளது. அங்கு வேலை பார்க்கும் தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோயில் நடை மூடப்பட்டது. பின்னர் கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் வேலை நடந்து வருகிறது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நடையை திறப்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
Continue reading …புது டெல்லி, ஜூன் 11 பிரதமர் நரேந்திர மோடி, கம்போடிய பிரதமர் சம்டெக் அக்கா மொஹா சேனா படேய் டெகோ ஹுன் சென்னுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்தனர். இருநாடுகளிலும் உள்ள கம்போடிய, இந்திய குடிமக்களுக்கு தொடர்ந்து உதவவும், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வசதி ஏற்படுத்தித் தரவும், இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பினரும், இந்தியாவுடன் நாகரீக மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருக்கும் நாடுமான கம்போடியாவுடனான உறவை, மேலும் […]
Continue reading …சென்னை, ஜூன் 3 சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அலுவலகப் பணியில் ஈடுபடும் உதவியாளர் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உதவியாளருடன் வேலை செய்துவந்த சக பணியாளர்கள் 77 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த புதன்கிழமை கண்காணிப்பாளர், புள்ளியியல் வல்லுநர், அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர் உட்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் […]
Continue reading …மீண்டும் தப்பியோடிய கொரோனா நோயாளி – சென்னையில் பரபரப்பு! சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்நிலையில் சென்னை கொரோனா தொற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த 63 வயது […]
Continue reading …கொரோனா சிகிச்சை… ஹோமியொபதி மருந்தை பரிந்துரைத்த தமிழக அரசு! மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஆர்செனிகம் ஆல்பம்30 சி என்ற மருந்தை தமிழக அரசு கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. கொரொனாவுக்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்ஆர்செனிகம் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி மருந்தை […]
Continue reading …தமிழகத்தில் கொரோனா சோதனை எண்ணிக்கைக் குறைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் அதிகம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,700 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 81 ஆக உள்ளது. 4000 பேருக்கு மேல் குணமாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 700 க்கு மேல் எண்ணிக்கை […]
Continue reading …