
நடிகை அனுஷ்கா தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த “அருந்ததி,” “ருத்ரமாதேவி” போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அனுஷ்கா கடைசியாக “பாகுபலி” திரைப்படத்தில் நடித்த பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார். கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இந்த சக்சஸ் மீட்டிங்கில் இரண்டு முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “லால் சலாம்” திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவானது. இத்திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மேலும் இத்திரைப்படத்தால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு மிகப்பெரிய […]
Continue reading …
தேமுதிக வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ, அதிமுகவோ யாருடனாவது கூட்டணி வைப்போம் என்று தெரிவித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாகி உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தேர்தலில் தனித்தனியே களம் காணும், அதிமுகவும், பாஜகவும், பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பது இதுவரைக்கும் புரியாத புதிராக […]
Continue reading …
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர்.சா.பெருமாள்சாமி மறைவையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில், “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் அருமைத் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது […]
Continue reading …
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆயுஸ் மருத்துவம் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார். இன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஆயுர்வேதார், சித்தா, ஹோமியோபதி, யுனானி உள்ளிட்டவற்றிற்கான ஆயுஸ் மருத்துவமனையை தலைநகர் டில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். அப்போது அவர், “ஆயுஸ் அமைச்சகத்துட்ன கொரொனா தொற்று காலத்தில் இருந்தே தொடரில் இருக்கிறேன். எனக்கு முதல்முறை கொரொனா தொற்று ஏற்பட்டபோது, பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்துப் பேசினார். ஆயுஸில் இருக்கும் ஒரு வைத்தியரின் […]
Continue reading …
விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், ஆம் ஆத்மி, அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன. டில்லி அமைச்சர் சவுரவ் பரத்வாத் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு இக்கூட்டணியில் தொடரக் கூடாது என அழுத்தக் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று டில்லி […]
Continue reading …
தேனி காட்ரோடு அருகே விபத்து. விரைந்து உதவிய தேனி எம்.பி ரவுந்திரநாத். தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் சோழவந்தான் தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக சென்று கொண்டிருந்தார். காட்ரோடை தாண்டி செல்லும்போது பரசுராமபுரம் அருகே ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சாலையில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த எம்.பி உடனடியாக தனது காரை நிறுத்தி வேகமாக இறங்கி சென்று விசாரித்தார். அதில் விபத்துக்குள்ளானவர் ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரை […]
Continue reading …
தற்போது தமிழகத்தில் அரிசியின் விலை கடும் உயர்வால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். அரிசியின் விலை கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.17 வரை உயர்ந்துள்ளதாகவும், இதையடுத்து சென்னையில் ஏற்கெனவே கிலோ 60க்கு விற்பனையாகும் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே அரிசி விலை அதிகரித்துள்ளது. அரிசியின் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பால், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை […]
Continue reading …
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் நேரில் வந்து கேட்டுக் கொண்டாலும் அவருக்கு அரசியல் ஆலோசனை கூற மாட்டேன் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரம் நெருங்கிவிட்டால் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட அரசியல் ஆலோசகர்களுக்கு மவுசு அதிகமாகிவிடும். பல அரசியல் கட்சிகள் அவர்களை அணுகி கோடிகளில் பணத்தை கொட்டி கொடுத்து ஆலோசனை பெற்றுக் கொள்வார்கள். வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி போட்டியிட இருக்கும் நிலையில் அவருக்கு பிரசாந்த் கிஷோர் […]
Continue reading …
தன் காதலரும் நடிகருமான ஜக்கி பக்னானியைத் முன்னணி நடிகை ரகுல் பீரித்தி சிங் இன்று திருமணம் செய்து கொண்டார். ரகுல் பிரீத் சிங் கடந்த 2009ம் ஆண்டு கன்னட திரைப்படமான “கில்லி” மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இவர் “கெரடம்,” “தடையறத் தக்க,” “வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்,” “துருவா,” “ஸ்பைடர்,” “தீரன் அதிகாரம் ஒன்று,” “ரன்வே,” “டாக்டர் ஜி” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரகுல் பிரீத் சிங் தனது காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. […]
Continue reading …