
அதிமுக எம்.எ.ஏக்கள் 2017ல் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது அங்கு நடிகைகளோடு அவர்கள் உல்லாசமாக இருந்ததாகவும், நடிகை திரிஷாவின் பெயரையும் குறிப்பிட்டு சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஏ வி ராஜுவை கண்டித்தும் குரல்கள் எழுந்தன. சினிமா துறை சார்ந்த சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் திரிஷாவோடு இணைந்து நடித்த ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என யாருமே […]
Continue reading …
மம்மூட்டி கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “புழு,” “கண்ணூர் ஸ்குவாட்” மற்றும் “காதல்” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன. இதையடுத்து அவரின் அடுத்த படமாக நைட் வாட்ச் புரொடக்ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் “பிரமயுகம்” திரைப்படத்தில் நடித்து அந்த படம் கடந்த வாரம் ரிலீசானது. பேய் திரில்லர் வகைப் படமான இதை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார். இந்த படம் […]
Continue reading …
சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக சூர்யா நடிக்கும் “கங்குவா” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேல் நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படம் இந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் “கங்குவா” படத்தின் வி […]
Continue reading …
சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் ‘தக் லைஃப்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் புரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது. படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் […]
Continue reading …
நடிகர் சூர்யா பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து தயாரிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார். அதற்குக் காரணம் இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று கூறப்பட்டது. இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது “வணங்கான்” படத்தை இயக்குனர் பாலா மற்றும் “மாநாடு” படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி […]
Continue reading …
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அன்புமணிக்கு அமைச்சர் பதவி தர பாஜக ஒப்பு கொண்டுள்ளதால் இரு கட்சிகளும் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அன்புமணியிடம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது இந்த முறை பாமகவுக்கு கண்டிப்பாக ஒரு மத்திய அமைச்சர் பதவி தருகிறோம் எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் […]
Continue reading …
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பயணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு வருகிறார். பிப்ரவரி 27ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபின், 28ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் […]
Continue reading …
பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு அளிக்க வேண்டாம் என நடிகர் கிஷோர் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தை ஒடுக்க ஹரியானா அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகர் கிஷோர் “நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகள் பேரணியை டில்லிக்கு நுழைய விடாமல் தடுத்து வரும் காவல்துறையினருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடிக்கும் […]
Continue reading …
சௌந்தரராஜன் -கல்யாணி தம்பதியினர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகர் 5ஆம் வீதியில் வசித்து வந்தார்கள். சௌந்தரராஜன் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் காண்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வந்துள்ளார். அவரது மனைவி கல்யாணி பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு ராஜி என்ற ஒரே பெண் குழந்தை பிறந்துள்ளது. ராஜியை 2008ல் பள்ளத்தூர் ராஜேஸ்வரன் என்பவரின் மகன் சக்கரவர்த்திக்கு ஆடம்பரமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது இவர்களுக்கு இரண்டு […]
Continue reading …
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் “டிரிக்கர்” என்ற குறும்படத்தை இயக்கினார். நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயும் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழ் சினிமாவின் புதிய இயக்குனராக சஞ்சய் அறிமுகமாகவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஹீரோவாக பலரது பெயர்கள் பேசப்பட்டது. அதேபோல் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்ற தகவல் வெளியாகி […]
Continue reading …