Home » Posts tagged with » Netrikkan (Page 136)

பிளிப்கார்டு மற்றும் ஸ்விகி நிறுவனத்தின் நடவடிக்கை!

Comments Off on பிளிப்கார்டு மற்றும் ஸ்விகி நிறுவனத்தின் நடவடிக்கை!

முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான பிளிப்கார்டு மற்றும் ஸ்விகி ஊழியர்களை பணி அந்த நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுதும் அமேசான், மைக்ரோசாப்ட், டெஸ்லா, கூகுள் உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற ஊழியர்களை அந்நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற சுமார் 400 ஊழியர்களை பணி நீக்கம் […]

Continue reading …

பாஜக தமிழகம், புதுச்சேரிக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு!

Comments Off on பாஜக தமிழகம், புதுச்சேரிக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு!

பாஜக மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. வருகிற மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த […]

Continue reading …

ரீல்ஸ் வீடியோ மோகத்தால் சிறைக்கு சென்ற நபர்!

Comments Off on ரீல்ஸ் வீடியோ மோகத்தால் சிறைக்கு சென்ற நபர்!

இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடும் மோகத்தால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ளாமல், சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி ? என வீடியோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள இனந்த மாநிலத்தைச் சேர்ந்த அனுமன் நாயக் என்ற இளைஞர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்து அதைப் பதிவேற்றி வைரலாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ளாமல், சாக்லேட் […]

Continue reading …

அமெரிக்காவுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம்!

Comments Off on அமெரிக்காவுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம்!

நைட்ரஜன் வாயுவை கொலை குற்றவாளிக்கு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்திற்காக அமெரிக்காவிற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ் சென்னட் என்பவர், தன் மனைவி எலிசபெத் பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகியோரை ஏற்பாடு செய்துள்ளார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடியே எலிசபெத்தை அடித்து கொலை செய்தனர். மனைவி கொலை செய்யப்பட்ட சில மாதங்களிலெயே சார்லச் தற்கொலை செய்து […]

Continue reading …

நடிகர் சிம்பு பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்!

Comments Off on நடிகர் சிம்பு பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்!

நடிகர் சிம்பு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். கடந்த மாதம் 28ம் தேதி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் சாரை சாரையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைமை கழகத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, விஜயகாந்த் […]

Continue reading …

தேமுதிகவிற்கு பெருகும் ஆதரவு! சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

Comments Off on தேமுதிகவிற்கு பெருகும் ஆதரவு! சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்ற பரபரப்பில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி விரிசல் ஏற்பட்டது. பாஜக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அக்கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் பல கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. […]

Continue reading …

திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை!

Comments Off on திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை!

நாளை காங்கிரஸ் கட்சியுடன் திமுகவின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெறுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் நாளை டில்லியிலிருந்து சென்னை வருகின்றனர். விமான […]

Continue reading …

தமிழில் பேசிய மாணவனை தாக்கிய ஆசிரியை !

Comments Off on தமிழில் பேசிய மாணவனை தாக்கிய ஆசிரியை !

மாணவர் ஒருவர் தமிழில் பேசியதால் ஆசிரியை மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை நாயகி என்பவர், அவ்வகுப்பைச் சேர்ந்த மாணவன் தமிழில் பேசியதால் ஆத்திரமடைந்து அவரது காதைப் பிடித்துத் திரிகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவனை தாக்கியதாக தனியார் பள்ளி […]

Continue reading …

காவல்துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

Comments Off on காவல்துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

11 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் எஸ்.பி.சாமிநாதனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றி வந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பாக்ரேலே சேப்பஸ் கல்யாண் வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். […]

Continue reading …

திமுக ஆலோசனைக் கூட்டம்!

Comments Off on திமுக ஆலோசனைக் கூட்டம்!

திமுக சார்பில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திட, கழகத்தலைவர் முதலமைச்சர், கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்துள்ளார்கள். இக்குழுவின் சார்பில், சேலம் மக்களவைத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயம் -கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம். இக்கூட்டத்தின் […]

Continue reading …