
சமீபத்தில் அசோக் செல்வன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் “ப்ளூ ஸ்டார்” திரைப்படம் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். விழாவில் தன் மனைவி கீர்த்தி பாண்டியன் பற்றி அவர் மனம் திறந்துள்ளார் அசோக் செல்வன். ஷாந்தனு, பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
வாட்ஸப் செயலி மூலம் மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக ஒன்று சேர்த்து நேற்று கூட்டம் கூட்டினர். இதுதொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. யூடியூபில் விளம்பரம் பார்த்தால் அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம் மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் கூறி பல்லாயிரக்கணகான மக்களை இதில் இணைந்து, பணமோசடி செய்ததாக கடந்த 19ம் தேதி இந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு […]
Continue reading …
துரை வைகோ மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், 6 தொகுதிகளில் பூத் அமைத்து பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ், திமுக, திரிணாமுல், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ளன. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தங்கள் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அனைத்து கட்சிகளும் தயார்படுத்தி, தொகுதி பங்கீடுகள் பற்றி கூட்டணி கட்சிகளும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மதிமுக […]
Continue reading …
நாடு முழுதும் மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ளதால், எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன் கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை தயார்படுத்தி வருகின்றன. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, தொகுதிப்பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இன்று 16 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான 16 பேர் அடங்கிய முதற்கட்ட […]
Continue reading …
கடந்த சில வாரங்களிலேயே நான்கு முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார். மீண்டும் ஒரு முறை தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்டதக்க தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நடந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 18ம் தேதி […]
Continue reading …
“எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு தோல்வியாக அமைந்தது. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் “கங்குவா” படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் […]
Continue reading …
விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தங்கலான்.’ இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. நவம்பர் 1ம் தேதி “தங்கலான்” படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் “தங்கலான்” திரைப்படம் மேலும் தள்ளிபோகும் என […]
Continue reading …
ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகர்களின் குரலில் பாட்டு குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார். “லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகிவரும் நிலையில் இப்போது பாடல்கள் பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதில் ஒரு […]
Continue reading …
பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு முதலாக தொடர்ந்து இரண்டு முறை 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2019ல் இரண்டாவது முறையாக பெரும்பான்மை ஆட்சி அமைத்த பாஜகவின் ஆட்சி காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலுகு முன்பாக நாளை மறுநாள் (பிப்ரவரி 1) நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தாண்டின் முதல் மத்திய கூட்டத்தொடரான இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து […]
Continue reading …
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார். இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து ஜாமீனுக்கு விண்ணப்பித்து வருகிறார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக அவரது உடல்நலத்தை சுட்டிக்காட்டி […]
Continue reading …