
உலகநாயகன் கமல்ஹாசன் நாடு முழுதும் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். 75வது குடியரசு தின விழா அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு சாதனை செய்தவர்களுக்கு சிறப்பு விருதுகளை அளித்தார். உலக நாயகன் கமலஹாசன் தனது சமூக வலைதளத்தில், “மக்களால் மக்களுக்காக […]
Continue reading …
நேற்று மாலை இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி காலமானார். அவரது மறைவிற்கு அமைச்சர் உதயநிதி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தங்களது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைச்சர் உதயநிதி தனது இரங்கல் செய்தியில், “இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு […]
Continue reading …
சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதன்பின் விடுதலை செய்யப்பட்டார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தன்னை சிகிச்சைக்கு அனுமதிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனது […]
Continue reading …
2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பத்மவிபூஷன் விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதாகம். இதில் இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஜயந்திமாலா உள்ளிட்ட ஐவருக்கும், பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மறைந்த தேமுதிக […]
Continue reading …
அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதோடு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் என் மண் என் மக்கள் பாதை யாத்திரையின் போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, “வள்ளலாரின் கொள்கையை கடைப்பிடித்து வரும் ஊரில் போலீசார் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாதது. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடப்படும், அடுத்த கையெழுத்து கள்ளுக்கடைகள் திறக்கப்படும்” என்று கூறினார். […]
Continue reading …
பட்ஜெட் தயாரித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா கிண்டி வழங்கப்படுவது வழக்கம். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. பட்ஜெட்டில் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நேற்று சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் குறித்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பட்ஜெட்டுக்கு முன்பாக நேற்று நிர்மலா […]
Continue reading …
காங்கிரஸ் தலைவர் கார்கே கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என கடந்த தேர்தலில் அறிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தலைவர் கார்கே தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் […]
Continue reading …
நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். இவர் வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். அத்திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூரி “விடுதலை 2” மற்றும் “கொட்டுக்காளி” ஆகிய படங்களை முடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் “கருடன்” படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் […]
Continue reading …
நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். ஆனால் அதன் பின்னர் “36 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக “காதல்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. தமிழில் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அவர் இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் அஜய் […]
Continue reading …
பன்சாலி மிகப்பிரம்மாண்டமாக அழகியல் தன்மையோடு புராணப் படங்களை எடுப்பதில் புகழ் பெற்றவர். சமீபத்தில் அவர் இயக்கிய “கங்குபாய் கத்யவாடி” திரைப்படத்துக்காக ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அவர் 1952ம் ஆண்டு வெளியான “பைஜு பாவ்ரா” படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது […]
Continue reading …