Home » Posts tagged with » Netrikkan (Page 146)

முன்னாள் அதிபருக்கு மரணத்திற்கு பின் மரண தண்டனை!

Comments Off on முன்னாள் அதிபருக்கு மரணத்திற்கு பின் மரண தண்டனை!

மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான வழக்கு ஒன்றிற்காக அவரது மரணத்திற்கு பிறகு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பர்வேஸ் முஷாரப்பிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச […]

Continue reading …

ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம்: ஜவஹருல்லா!

Comments Off on ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம்: ஜவஹருல்லா!

மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவஹருல்லா சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்து ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம் என பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பயணித்தால் நாடாளுமன்றம் செல்லலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டு வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களின் நலன்களை பற்றி கூறும் வார்த்தைகளில் உண்மை துளியும் இருந்ததில்லை. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஜெயகுமார் கருத்து!

Comments Off on சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஜெயகுமார் கருத்து!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்தாண்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், “கட்சியிலிருந்து நீக்கிய பிறகும் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொண்டு ஓ.பி.எஸ் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாது’’ என எடப்பாடி பழனிசாமி […]

Continue reading …

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி மறுப்பு!

Comments Off on ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி மறுப்பு!

மணிப்பூர் மாநில அரசு ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜனவரி 14ம் தேதி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. மணிப்பூர் அரசு யாத்திரைக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என மணிப்பூர் அரசு கருதுகிறது என்றும், யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது […]

Continue reading …

திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!

Comments Off on திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!

பல ஆண்டுகளாக திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இக்குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் […]

Continue reading …

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

Comments Off on போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

தற்காலிகமாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். சமீபத்தில் தமிழக அரசுடன் பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி போராட்டம் தீவிரமடைந்துள்ளன. இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை […]

Continue reading …

கிரிக்கெட் வீரர் சிறுமிக்கு பாலியல் வன்முறை!

Comments Off on கிரிக்கெட் வீரர் சிறுமிக்கு பாலியல் வன்முறை!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே. நீதிமன்றம் இவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு லமிச்சனே மீது 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த வழக்கு நடந்து வந்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லமிச்சனே நேபாளத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவர் 2018ம் ஆண்டு […]

Continue reading …

விழிப்புணர்வே எங்களின் நோக்கம்; நயன்தாரா பேச்சு!

Comments Off on விழிப்புணர்வே எங்களின் நோக்கம்; நயன்தாரா பேச்சு!

நடிகை நயன்தாரா விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, “நாப்கின் பற்றி பொது வெளியில் பேசுகிறோம். இதுவே பெரிய மாற்றம்” என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடிகை நயன்தாரா பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த “ஜவான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சினிமாவில் நடிப்பதுடன் தொழிலதிபராக வலம் வரும் நயன்தாரா, கடந்தாண்டு Femi9 எனும் புதிய பிராண்ட் சானிட்டர் நாப்கினை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த சானிடர் நாப்கினை மக்களிடம் கொண்டு சென்றவர்களை பாராட்டி நடைபெற்ற விழாவில் நயன்தாரா […]

Continue reading …

‘தக்லைஃப்’ படத்தின் அப்டேட்!

Comments Off on ‘தக்லைஃப்’ படத்தின் அப்டேட்!

இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசனின் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் புரமோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலானது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்று இப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கமலின் “தக்லைஃப்” படத்தில், ஜோஜூ ஜார்ஜ், மற்றும் கௌதம் கார்த்திக் […]

Continue reading …

ரஜினியை பற்றி கூறிய மாளவிகா மோகனன்!

Comments Off on ரஜினியை பற்றி கூறிய மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் “பட்டம் போல,” “பியாண்ட் த கிளவுட்ஸ்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “பேட்ட,” “மாறன்,” விஜயுடன் இணைந்து “மாஸ்டர்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள “தங்கலான்” படம் விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவக்குமார், சிம்ரன் ரவாசுதீன் சித்திக், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “பேட்ட.” இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று […]

Continue reading …