
சமீபத்தில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. தற்போது சமீபத்தில் புதுவையிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “புதுச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கொண்டாட்டம் எல்லாவற்றைக்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். பாதுகாப்பு […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபதாரமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த டிசம்பர் 21ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது. இதுதீர்ப்பினை அடுத்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற […]
Continue reading …
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை […]
Continue reading …
நடிகை திரிஷா பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. நடிகை திரிஷா சமீபத்தில் வெளியான “பொன்னியின் செல்வன் 1,” “பொன்னியின் செல்வன் 2,” “லியோ” ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. நடிகர் அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கவுள்ளார். […]
Continue reading …
இதுவரை ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானின் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி […]
Continue reading …
பாஜக கூட்டணியை இவ்வாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வீழ்த்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதும் 375 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியில் மொத்தம் 25 அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் மட்டுமே 375 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதமுள்ள 175 தொகுதிகள் மட்டுமே மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் என்பதால் இந்தியா […]
Continue reading …
பிரதமர் மோடி இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு வருவதில் பெருமிதம் கொள்வதாக பேசினார். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். இதுகுறித்து அவர் பேசும்போது, “இவ்வாண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் முதல் அரசு நிகழ்ச்சியாகவும் தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது, பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை.களை தொடங்கினர். […]
Continue reading …
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 2.5 மடங்கு கூடுதல் நிதி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முந்தைய காலங்களை விட தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிகமாக நிதி கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்” […]
Continue reading …
வாட்ஸ் அப் நிர்வாகம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகம் முழுதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெசேஜ்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்வு மட்டும் இன்றி பண பரிவர்த்தனை வசதியும் தற்போது இதில் உள்ளது. அதேபோல் ஆடியோ கால் வீடியோ கால் வசதியும் உள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு […]
Continue reading …
ஆன்லைன் மூலமாகவும் யுபிஐ மூலமாகவும் இந்தியாவில் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி அதற்கேற்றவாறு புதிய விதிமுறைகளை அமல்படுத்துகிறது. இந்தியாவில் 2016ம் ஆண்டில் நடைபெற்ற பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தது. இதற்காக கூகிள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற பல பரிவர்த்தனை செயலிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம் இதை சரியாக கையாள தெரியாத நபர்களிடம் சில மோசடி கும்பல் எளிதில் பணத்தை திருடிவிடும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது. யூபிஐ பணப்பரிவர்த்தனைகளை ஒழுங்குப்படுத்த நேற்று முதல் புதிய விதிமுறைகளை ஆர்பிஐ […]
Continue reading …