
உதயநிதி மற்றும் வடிவேலு நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள “மாமன்னன்” திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்த “மாமன்னன்” கதாபாத்திரம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Continue reading …
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, இதற்காக ஆளுங்கட்சியாக திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் பங்கேற்றுள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் அனைத்து வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மாவட்டங்களை மண்டலங்க்ளாக பிரிந்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது. அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட வாக்குச்சாவடி தேர்தல் பொறுப்பாளர்கள் ககூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது. திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் இரண்டாம் பாகத்தை நேற்று வெளியிட்ட இதுகுறித்த ஆதாரங்களையும் அவர் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. திமுக தரப்பில் இதுகுறித்த பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேட்டியில், “அண்ணாமலை என்ன கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. நான் கூட சொல்லலாம் அண்ணாமலை ரூ.2,500 கோடிக்கு பினாமி என்று. ஆனால், அதனை நாம் நிரூபிக்க வேண்டும். திமுக எதையும் சந்திக்க தயார். அண்ணாமலை […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை துவக்கி மத்திய உள்துறை அமைச்சர் நாளை தமிழகம் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. நாளை மறுநாள் பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரம் கோயிலிலிருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக நாளை டில்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். இதனை அடுத்து மாலை 5:45 மணிக்கு ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதன் பின் […]
Continue reading …
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சமீபத்தில் பெறப்பட்ட நிலையில் மூன்றே நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 24ம் தேதி மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்களை தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுதும் உள்ள 20,765 நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு […]
Continue reading …
வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நெல்லை இடையே இயக்கப்படுவது எப்போது என்ற தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து மைசூர் மற்றும் சென்னையிலிருந்து கோவை ஆகிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து -நெல்லைக்கு இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது. சென்னையிலிருந்து -நெல்லைக்கு இடையே வந்தே பாரத் ரயில் கடந்த மாதமே தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. […]
Continue reading …
ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இப்படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த படம் சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது. ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி […]
Continue reading …
மக்கள் ஜனாதிபதி என்றும், ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள் தயாரித்து கொடுத்தார். எளிமையாக வாழ்த்த அவர், தன் பதவி காலத்திலும் சரி, அவர் பதவியில் இருந்து விலகிய பின்னும் தன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்று வாழ்ந்தவர் ஆவார். லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களுக்கு உற்சாகமூட்டி தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய சாதனையாளர். இளைஞர்களே கனவு காணுங்கள் தூங்கும்போது வருவதல்ல கனவு, உங்களை எது தூங்கவிடாமல் செய்வதே […]
Continue reading …
அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க்கில் மருத்துவர் ஒருவர் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஹேடன்(64) கடந்த 1980ம் ஆண்டிலிருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க் பிராஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்து வந்தார். அக்காலக்கட்டங்களில் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கடந்த 2017ம் ஆண்டு […]
Continue reading …
சிக்கிம் மாநில முதலமைச்சர் மகப்பேறு விடுமுறை ஆண்களுக்கும் உண்டு என்றும் ஒரு மாதம் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் அரசு ஊழியராக பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறுப்பை ஒரு வருடத்திற்கு நீடித்து அம்மாநில முதலமைச்சர் பிரேம் சிங் உத்தரவிட்டுள்ளார். அரசு பெண் ஊழியர்கள் முதலமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். மகப்பேறு விடுமுறை எடுக்கும் பெண் ஊழியர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் அந்த பெண்களின் கணவருக்கும் ஒரு மாதம் […]
Continue reading …