
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர். இப்போது “லியோ” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் பற்றிய ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. படம் கேரளாவில் […]
Continue reading …
நடிகை ராஷ்மிகா இந்தியளவில் பிரபலமான நடிகையாக உள்ளார். அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக “நேஷனல் க்ரஷ்” என்று அழைத்து வருகின்றனர். ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின. படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, […]
Continue reading …
சரக்கு கப்பல் ஒன்று டச்சு கடல் பகுதியில் தீப்பற்றியுள்ள நிலையில் அதில் பணியாற்றிய 20 இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்த பெரும் பதட்டம் எழுந்துள்ளது. 3000 சொகுசு கார்களை ஜெர்மனியிலிருந்து ஏற்றிக் கொண்டு வந்த பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எகிப்து நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது. இக்கப்பல் டச்சு கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியுள்ளது. கப்பலில் சுமார் 20க்கும் மேல் இந்தியர்கள் பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது. இத்தீ விபத்தில் ஒரு இந்திய […]
Continue reading …
மத்திய அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் வீடியோ நாடாளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியானதில் சதியிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறும்போது, “ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஜூலை 19ம் தேதி மணிப்பூர் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானது. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடந்த ஐந்து நாட்களாக அமளி செய்து வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்திற்கு முதல் நாள் இந்த வீடியோ வெளியாக வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர்.” இத்திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் முதல் சிங்கில் “காவாலா,” 2 வது “சிலில் குஹூம்,” 3 வது […]
Continue reading …
நைஜீரியாவில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அரசியல் சாசனம் கலைக்கப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் முகமது பசோவ்ம் ஆட்சி செய்து கொண்டிருந்தார். திடீரென ராணுவம் ஆட்சியை கைப்பற்றி அதிபரையும் கைது செய்துள்ளது. அதுமட்டுமின்றி நைஜீரிய நாட்டின் அரசியல் சாசனம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நைஜீரியா நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நைஜீரியா நாட்டின் […]
Continue reading …
தக்காளியை தனது நிலத்தில் பயிரிட்ட தக்காளியை ஒரே மாதத்தில் விற்பனை செய்ததால் மூன்று கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சந்திர மௌலி விவசாயி தனது நிலத்தில் விளைந்த விளைபொருட்களை விற்பனை செய்து பெரியளவில் லாபம் ஈட்டாமல் கடந்த பல ஆண்டுகளாக ஏழை விவசாயியாக இருந்தார். சமீபத்தில் அவர் தக்காளி பயிரிட்ட நிலையில் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1000 ரூபாய் முதல் 1500 […]
Continue reading …
சென்னைக்கு மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வந்த 9 பேரைச் சேர்ந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி வந்த ஒன்பது பேர் கொண்ட குடும்பம் தங்கியிருந்தனர். அவர்கள் குறித்த தகவலை மூர்த்தி என்பவர் மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அந்த குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு மனு அளிக்கப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக சென்று அவருக்கு […]
Continue reading …
ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரூ.500 நோட்டுகளில் இடம்பெற்றுள்ள ஸ்டார் குறியீடு குறித்து வதந்திகள் பரவி வருவது குறித்து விளக்கமளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் காலாவதியானது. புதிய ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. தற்போது வரை புழக்கத்திலுள்ள இந்த 500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்கள் இடம் பெறுவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக புழக்கத்திலிருந்து வரும் 500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்களுக்கு நடுவே ஸ்டார் […]
Continue reading …
ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ் நடிப்பில்வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மொக்கை போடும் பேய்ப் படங்களுக்கு நடுவில், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது இத்திரைப்படம். அதனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி, வசூலையும் குவித்தது. அதையடுத்து ஆதி நடித்த “வீரன்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நீண்டகாலமாக “மரகத நாணயம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய […]
Continue reading …