
பிரதமர் மோடி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவிற்கு வந்துள்ளதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது” என்று தமிழில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை செயலாற்றுமென நான் உறுதியாக நம்புகின்றேன். இந்திய – இலங்கை நட்புறவின் 75 ஆண்டுகளையும், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையையும் […]
Continue reading …
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு தண்ணீரை கண்டிப்பாக திறந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் ஜூன் மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக மாநிலம் இன்னும் தரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து டில்லி சென்று அவர் மத்திய அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கர்நாடக மாநிலத்திற்கு குடிநீர் தேவைக்கான நீரை வைத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் […]
Continue reading …
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். பெங்களூரில் சமீபத்தில் எதிர்கட்சிகள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்கு குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் டில்லியில் பாஜக கூட்டணி கூட்டம் நடந்தபோதும் அதிலும் குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இரண்டு கூட்டணிகளும் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை குமாரசாமி அதிருப்தியுடன் தெரிவித்திருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி பாஜகவுடன் இணைந்து […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரரின் உத்தரவான தாய்மொழிக் கல்வி, உண்மையான படைப்பாற்றலை உருவாக்கும் என்பது போன்றே இதற்கான உத்தரவை தமிழகப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வையில் வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020, குழந்தைகள் அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்பதையும் பள்ளிகளில் மாநில மொழிகளை மேம்படுத்துவதையும் வலியுறுத்துகிறது. சிபிஎஸ்இயின் சமீபத்திய சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், உயர்நிலை வரை […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம், “ஜெயிலர்.” வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இத்திரைப்படத்துக்கு இல்லை. அதற்குக் காரணம் ரஜினிகாந்தின் வரிசையான முந்தைய தோல்வி படங்கள்தான். அதே போல படத்தை இயக்கும் நெல்சனின் கடைசி படமான “பீஸ்ட்” திரைப்படமும் தோல்விப்படமாக அமைந்தது. “ஜெயிலர்” திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் சுதந்திர தின விடுமுறையை ஒட்டி ஆகஸ்ட் 10ம் […]
Continue reading …
‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் “அயலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீசாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023ம் ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிலீஸ் வேலைகள் […]
Continue reading …
தெலுங்கான மாநிலத்தில் மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பைத் தொட்டியில் விவசாயிகள் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தக்காளியை ஒரு சில விவசாயிகள் பதுக்கி வைத்திருந்ததாகவும் ஆனால் கவனிக்காமல் விடப்பட்டதை அடுத்து அந்த தக்காளிகள் அனைத்தும் அழுகி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வேறு வழியின்றி மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பை தொட்டியிலும் கால்நடைகளுக்கு உணவாகவும் போட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அழுகிய […]
Continue reading …
தமிழ் சினிமாவில் 80களின் இறுதி மற்றும் 90களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை நதியா. அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலான அவர் மீண்டும் “எம் குமரன்” திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் கமல் கூட எந்த திரைப்படத்திலும் நடிக்கவே இல்லை. கமல் நடிப்பில் 1986ம் ஆண்டு உருவான “விக்ரம்” திரைப்படத்திலேயே அவர் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் கமல் அவரை […]
Continue reading …
தக்காளியின் வலை வெகுமளவிற்கு உயர்ந்துள்ள காரணத்தினால் சில ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. துபாயிலிருந்து இந்தியாவிற்கு வந்த இளம்பெண் ஒருவர் 10 கிலோ தக்காளியை கொண்டு வந்ததுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி 200 ரூபாய் அளவில் வட இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இளம்பெண் ஒருவர் தனது அம்மா வீட்டிற்கு துபாயிலிருந்து இந்தியா வருவதற்கு முடிவு செய்தார். அப்போது அவர்கள் தனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டபோது […]
Continue reading …
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் “பிராஜக்ட் கே” திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் அறிமுக வீடியோ சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள காமிக் கான்&ல் வெளியிடப்பட்டது. அப்போது கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் பிரபாஸ் ஆகிய மூவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது கமல்ஹாசன் பேசும்போது “நாங்கள் கதைகளை உருவாக்குகிறோம். […]
Continue reading …